பதிவு செய்த நாள்
31 மே2016
07:30
புதுடில்லி : பானாசோனிக் நிறுவனம், நடப்பு நிதியாண்டில், மொபைல் போன் விற்பனையின் மூலம், 2,500 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட முடிவு செய்துள்ளது. ஜப்பான் நாட்டை சேர்ந்த பானாசோனிக் நிறுவனம், வீட்டு உபயோக மின் சாதனங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிறுவனம், வாடிக்கையாளர்களை கவரும் வகையில், புதிய வகை, ‘ஸ்மார்ட்’ போன்களை அறிமுகம் செய்து வருகிறது. கடந்த ஆண்டில், இந்த நிறுவனத்தின் வருவாய், 1,200 கோடி ரூபாய் என்றளவில் இருந்தது. நடப்பு நிதியாண்டில், 3,000 ரூபாய் முதல், 20 ஆயிரம் ரூபாய் வரையிலான, 25 வகை ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்ய உள்ளது. இதையடுத்து, கடந்த ஆண்டில், 12 லட்சமாக இருந்த மொபைல் போன் விற்பனையை, நடப்பு ஆண்டில், 30 லட்சமாக அதிகரிக்க, பானாசோனிக் நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது. இதன் மூலம், 2,500 கோடி ரூபாய் வருவாய் ஈட்ட திட்டமிட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|