பதிவு செய்த நாள்
03 ஜூன்2016
07:33
சண்டிகார்: பஞ்சாப் மாநில அரசு, மைக்ரோசாப்ட் இந்தியா இடையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், பஞ்சாப் அரசின் கல்வி, வேளாண், சுகாதாரம் ஆகிய துறைகளில், ‘கிளவுட் கம்ப்யூட்டிங்’ தொழில்நுட்ப கட்டமைப்பை, மைக்ரோசாப்ட் ஏற்படுத்தி தர உள்ளது. இதன் மூலம், அந்த துறைகளில் மேற்கொள்ளப்படும் பணிகள், விரைவாக, பொது மக்களை சென்று அடையும். இதுகுறித்து, பஞ்சாப் அரசு அதிகாரி ஒருவர் கூறியதாவது: பஞ்சாப் அரசு, கடந்த, 2013ம் ஆண்டு முதல், மக்களுக்கு, தகவல் தொழில்நுட்ப முறையில் சேவை அளித்து வருகிறது. தற்போது, அதை நவீனப்படுத்த முடிவு செய்துள்ளது. இதற்காக, மைக்ரோசாப்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், பொது மக்களுக்கு, அனைத்து விதமான சேவைகளும் தாமதம் இல்லாமல், உடனடியாக கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|