பதிவு செய்த நாள்
06 ஜூன்2016
06:54
புதுடில்லி : இருசக்கர வாகன டாக்சி சேவைக்கு, மக்களிடையே அதிக வரவேற்பு இருப்பதை அடுத்து, விரைவில் நாடெங்கும் பைக் டாக்சி எனப்படும், இருசக்கர வாகன டாக்சிகள் ஓடக்கூடும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பைக் டாக்சிகளுக்கு சட்டப்பூர்வமான அனுமதியை வழங்குவது குறித்து, சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஆலோசித்து வருகிறது.இதுகுறித்து, இத்துறை சார்ந்த உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: மத்திய வாகன சட்டம், பைக் டாக்சிகளுக்கு அனுமதி அளிக்கவில்லை. இருப்பினும், கோவா, ஹரியானா மாநில அரசுகள் இந்த டாக்சிகளை அனுமதிக்கின்றன. அதே நேரம், கர்நாடக அரசு அனுமதிக்கவில்லை. எனவே, நாடு தழுவிய ஒட்டுமொத்த கொள்கையை ஏற்படுத்த அமைச்சரகம் விரும்புகிறது. பாதுகாப்பு, செயல்பாட்டு விதிமுறைகள் குறித்தும் ஆலோசிக்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|