பதிவு செய்த நாள்
22 ஜூன்2016
00:55
ஐதராபாத் : பருத்தி விலை உயர்வால், ஜவுளி துறைக்கு, வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை விட உற்பத்தியாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
உள்நாட்டில், பருத்தி விலை குவின்டாலுக்கு, 5,800 ரூபாய் வரை உயர்ந்து உள்ளது. இதனால், ஜவுளி துறையில் ஈடுபட்டு உள்ள பல நுாற்பாலைகள் கடும் பாதிப்பை சந்தித்து வருகின்றன. இதனால், ஜவுளி உற்பத்தியாளர்கள் வாரத்திற்கு இரண்டு நாட்கள் விடுமுறை விடுவதற்கு முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, தெலுங்கானா நுாற்பாலை மற்றும் ஜவுளி ஆலை உரிமையாளர்கள் கூட்டமைப்பு தலைவர் அகர்வால் கூறியதாவது: பருத்தி விலை உயர்வால், தெலுங்கானா, ஆந்திரா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் உள்ள ஜவுளி மற்றும் நுாற்பாலைகள் கடும் பாதிப்பை சந்தித்து உள்ளன. இதற்கு, பன்னாட்டு நிறுவனங்கள் அதிகளவில் பருத்தியை கொள்முதல் செய்து, பதுக்கி வைத்ததே முக்கிய காரணமாகும். இந்த இழப்பை ஈடு செய்ய, ஜவுளி ஆலைகளுக்கு, இரண்டு நாட்கள் விடுமுறை விட முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|