பதிவு செய்த நாள்
25 ஜூன்2016
07:33
தமிழகத்தில் அதல பாதாளத்தில் விழுந்து கிடந்த சாப்ட்வேர் ஏற்றுமதி, கடந்த நிதியாண்டில் கணிசமாக உயர்ந்து, 95 ஆயிரம் கோடி ரூபாயை நெருங்கியுள்ளது.
தமிழகத்தில், ஐ.டி., என்னும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் முதலீடுகளை அதிகரிக்க, பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மாநிலத்தில், ஏழு இடங்களில், ‘எல்கோசெஸ்’ எனப்படும் ஐ.டி., சார்ந்த சிறப்பு மண்டலங்களை, ‘எல்காட்’ எனப்படும் தமிழக மின்னணு நிறுவனம் உருவாக்கியுள்ளது. அவற்றில், பல நுாறு சாப்ட்வேர் நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. சாப்ட்வேர் ஏற்றுமதியில், நாட்டில், தொடர்ந்து மூன்று இடங்களுக்குள், தமிழகம் இருந்து வருகிறது.
அதிகரிப்புதமிழகத்தில், 2010 – 11ல், 42 ஆயிரத்து 105 கோடி ரூபாயாக இருந்த சாப்ட்வேர் ஏற்றுமதி, சிறந்த கட்டமைப்பு வசதியால், 2013 – 14ல், 82 ஆயிரத்து 445 கோடி ரூபாயாக அதிகரித்தது. அதாவது, நான்கு ஆண்டு களில், இரு மடங்கு அதிகரித்தது. எனினும், 2014 – 15ல், சாப்ட்வேர் ஏற்றுமதி, திடீரென வீழ்ச்சி அடைந்தது. அது, 10 சதவீதம் குறைந்து, 75 ஆயிரம் கோடி ரூபாயாக சரிவு கண்டது. இந்த நிலையில், 2015 – 16ல், சாப்ட்வேர் ஏற்றுமதி கணிசமாக உயர்ந்துள்ளது. இதுகுறித்து, தகவல் தொழில் நுட்பத்துறை அதிகாரிகள் கூறுகையில், தமிழகத்தில் சாப்ட்வேர் ஏற்றுமதி, 2015 – 16ம் நிதியாண்டில், அதற்கு முந்தைய ஆண்டைவிட, 25 சதவீதம் அதிகரித்துள்ளது. அது, 95 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என, உத்தேசமாக மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு, ஒரு லட்சம் கோடி ரூபாயை நிச்சயம் கடப்போம், என்றனர்.
பறிபோகும் இரண்டாவது இடம்‘நாஸ்காம்’ எனப்படும் தேசிய சாப்ட்வேர் நிறுவனங்களின் கூட்டமைப்பின், தென்மாநில பிராந்திய இயக்குனர் புருஷோத்தமன் கூறும்போது, ‘‘இந்தியாவில், பெங்களூரு, டில்லி, நொய்டா உள்ளிட்ட தேசிய தலைமை பிராந்தியம் பகுதி ஆகியவற்றிற்கு அடுத்தபடியாக, தமிழகம், சாப்ட்வேர் ஏற்றுமதியில் மூன்றாம் இடத்தில் உள்ளது. தமிழகத்தில் உள்ள பல பெரிய நிறுவனங்கள் குறிப்பாக, ‘டி.சி.எஸ்., சின்டெல் ஹெக்சா’ உள்ளிட்டவை நாட்டின் மற்ற பகுதிகளில், தலைமை அலுவலகங்களை வைத்துள்ளன. அதனால், தமிழகத்தில் சாப்ட்வேர் உற்பத்தி மற்றும் தொழிலாளர் எண்ணிக்கை அதிகமாக இருந்தாலும், குறிப்பிட்ட அளவிலான வருவாய், டில்லி, மும்பை போன்ற நகரங்களின் வருவாயாக மாறிவிடுகிறது. இதனால், சாப்ட்வேர் ஏற்றுமதியில், தமிழகத்திற்கு நியாயமாக கிடைக்க வேண்டிய, இரண்டாவது இடம் கிடைப்பதில்லை.
பெங்களூரு 4 மடங்கு அதிகம் தமிழகத்தை விட, கர்நாடகாவின் தலைநகர் பெங்களூரில், சென்னை பிராந்தியத்தை விட, நான்கு மடங்கு அதிகமாக சாப்ட்வேர் ஏற்றுமதி செய்யப்படுகிறது. அவர்கள், நான்கு லட்சம் கோடி ரூபாயை எப்போதோ கடந்து விட்டனர்.
ஆண்டு ஏற்றுமதி (ரூபாய் கோடியில்) 2010 – 11 42,105 2011 – 12 46,6722012 – 13 66,0242013 – 14 82,445 2014 – 15 75,0002015 – 16 95,000
– நமது சிறப்பு நிருபர் –
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|