பதிவு செய்த நாள்
26 ஜூன்2016
01:52
புதுடில்லி;‘‘நாட்டிலுள்ள, 22 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை ஒட்டி, பெட்ரோ கெமிக்கல் மண்டலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது,’’ என, மத்திய அமைச்சர் அனந்த் குமார் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:மத்திய அரசு பெட்ரோலிய பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க, பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தற்போது, 22 கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை ஒட்டி, பெட்ரொ கெமிக்கல் மண்டலங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. குஜராத், மஹாராஷ்டிரா, ஆந்திரா, ஒடிசா, தமிழகம் ஆகிய மாநிலங்களில் இவற்றை அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதன் மூலம், பெட்ரோலிய துறை வளர்ச்சி அடைவதுடன், ஒரு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்படும். கெமிக்கல் தொழில் துறையினர், அரசின் சலுகைகளை எப்போதும் எதிர்பார்த்து இருக்கக் கூடாது. தேவையான உதவிகளை அரசு நிச்சயம் செய்யும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|