பதிவு செய்த நாள்
02 ஜூலை2016
08:25
புதுடில்லி : ஜே.சி.பி., இந்தியா, 2016ம் ஆண்டில், விற்பனை வருவாயை, 20 சதவீதம் அதிகரிக்க முடிவு செய்துள்ளது. ஜே.சி.பி., இந்தியா, கட்டுமான பணிகளில் பயன்படுத்தப்படும் இயந்திரங்களை உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனம், நடப்பு ஆண்டில், விற்பனை வருவாயை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, ஜே.சி.பி., நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி விபின் சாந்தி கூறியதாவது:தென் கிழக்கு மற்றும் மத்திய கிழக்கு ஆசியா, ஆப்ரிக்க நாடுகளுக்கு, நாங்கள் ஏற்றுமதி செய்கிறோம். கட்டுமான பணிகளில் பயன்படுத்தும் இயந்திரங்கள் துறை, 40 சதவீதம் என்ற அளவில் வளர்ச்சி கண்டு வருகிறது. 2015ம் ஆண்டில், எங்கள் விற்றுமுதல், 5,000 கோடி ரூபாய். நடப்பாண்டில், எங்கள் விற்பனை வருவாய், 20 சதவீதம் அதிகரிக்கும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|