தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவுதங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைவு ... மாலைநேர நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு மாலைநேர நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ.56 உயர்வு ...
சரிய துவங்கியது காய்கறி விலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 ஜூலை
2016
13:43

புதுடில்லி : ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் இருந்து காய்கறி வரத்து அதிகரித்து உள்ளதால், தமிழகத்தில் காய்கறிகள் விலை சரியத் துவங்கி உள்ளது.தமிழகத்தில், பல மாவட்டங்களில் காய்கறி உற்பத்தி நடந்தாலும், கோடை வெயில் காரணமாக, ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், காய்கறி விளைச்சல் வெகுவாக சரிந்தது. வெளிமாநில வரத்தும் குறைந்ததால், காய்கறிகளுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை கிடுகிடுவென உயர்ந்தது.தக்காளி, பீன்ஸ், அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் கிலோ, 100 ரூபாயை தொட்டது. கத்தரிக்காய், சேனைக்கிழங்கு, வெண்டைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் கிலோ, 60 ரூபாய் வரை விற்கப்பட்டன.ஆந்திரா, கர்நாடகா மாநிலங்களில், தற்போது காய்கறி விளைச்சல் துவங்கி, ஒரு வாரமாக, அதிக அளவில் வரத்து உள்ளது. இதனால், சென்னை உள்ளிட்ட நகரங்களில், காய்கறிகளின் விலை வெகுவாக குறைய துவங்கி உள்ளது.தக்காளி, கத்தரி, உருளை, சேனைக்கிழங்கு, பச்சைமிளகாய், வெண்டைக்காய், கேரட், பீட்ரூட், முள்ளங்கி, அவரைக்காய் என, பல காய்கறிகளின் விலை, கிலோ, 25 முதல், 30ரூபாய் வரை விற்பனையாகிறது. வரும் நாட்களில், வரத்து மேலும் அதிகரிக்கும் என்பதால், ரம்ஜான் பண்டிகைக்கு பிறகு, விலை மேலும் சரியும் என, வியாபாரிகள் கூறுகின்றனர்.வாழைக்காய் ரூ.10 திடீர் உயர்வு ஏன்?பல காய்கறிகளின் விலை குறைந்து வந்தாலும், வாழைக்காய் விலை திடீரென உயரத் துவங்கி உள்ளது. கடந்த வாரம், 6, 7 ரூபாய்க்கு விற்ற வாழைக்காய், நேற்று, 10 ரூபாயாக உயர்ந்தது. 'ஆந்திரா மற்றும் தமிழகத்தில் பல மாவட்டங்களில் இருந்தும், தினமும், 20 லாரிகளில் வரும் வாழைக்காய், தற்போது, 10 லாரிகளாக குறைந்து விட்டது. இதுவே விலை உயர்வுக்கு காரணம்' என, கோயம்பேடு வியாபாரிகள் தெரிவித்தனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)