பதிவு செய்த நாள்
27 ஜூலை2016
01:19
புதுடில்லி : மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கூடுதல் செயலர் கே.பி.அகர்வால் கூறியதாவது: வலைதளத்தில், மருந்துகள் விற்பனையை கட்டுப்படுத்த சட்டம் இல்லை. வலைதள நிறுவனங்களின் நம்பகத்தன்மை குறித்தும், அவை, அங்கீகரிக்கப்பட்ட மருந்துகளைத் தான் விற்பனை செய்கின்றனவா என்பது பற்றியும், நுகர்வோர் அறிய வசதி இல்லை.இதுபோன்ற சூழலில், நுகர்வோர் நலன் பாதிக்கப்படுவதை தடுக்கவும், வலைதளங்களில் மருந்துகளின் விற்பனையை ஒழுங்குபடுத்தவும், மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக, 1940ம் ஆண்டு, மருந்து மற்றும் அழகு சாதனங்கள் சட்டத்தில் திருத்தம் செய்ய, முடிவு செய்துள்ளது. இது, வலைதள நிறுவனங்களுக்கும், நுகர்வோருக்கும் பரஸ்பரம் பயன் அளிக்கக் கூடியதாக இருக்கும். இந்தாண்டு இறுதிக்குள், இந்திய மருந்து கட்டுப்பாட்டு கழகத்தின், வலைதள மருந்து விற்பனை தொடர்பான விதிமுறைகள் அமலுக்கு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|