பதிவு செய்த நாள்
27 ஜூலை2016
01:24
சென்னை : மொபைல் போன் விற்பனையில் ஈடுபட்டு வரும், லாவா நிறுவனம், நொய்டாவில் உள்ள ஆலையில், மாதந்தோறும், 25 லட்சம் மொபைல் போன்களை, ‘அசெம்பிள்’ செய்ய திட்டமிட்டு உள்ளது. இதுகுறித்து, லாவா இன்டர்நேஷனலின், தென் மாநிலங்களுக்கான முதுநிலை துணை தலைவர் லுாக் பிரகாஷ் கூறியதாவது:இந்தியாவில், ‘ஸ்மார்ட் போன்’ விற்பனையில், தமிழகம் முன்னணியில் உள்ளது. இதனால், தமிழகத்தில் அதிகளவில் மொபைல் போன்களை விற்பனை செய்ய, லாவா திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில், 67 டீலர்கள் மூலம், 6,750 கடைகளில், லாவா போன்கள் விற்பனை ஆகின்றன. இந்த எண்ணிக்கை அதிகரிக்கப்படும். எங்கள் நிறுவனத்திற்கு, நொய்டாவில், மாதந்தோறும், 10 லட்சம் மொபைல் போன்களை, ‘அசெம்பிள்’ செய்யும் ஆலை உள்ளது. இதன் திறன் உயர்த்தப்பட்டு, 25 லட்சம் போன்கள் இந்த ஆண்டின் இறுதிக்குள் தயாரிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|