பதிவு செய்த நாள்
27 ஜூலை2016
01:25
புதுடில்லி : ‘எஸ்ஸார் போர்ட்’ நிறுவனம், ஹசீரா துறைமுகத்தை விரிவுபடுத்த, 750 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது. எஸ்ஸார் போர்ட் நிறுவனத்திற்கு, ஹசீரா, வாடிநார், பரதீப், சாலையா, விசாகப்பட்டினம் ஆகிய இடங்களில், துறைமுகங்கள் உள்ளன. இந்த நிலையில், ஹசீரா துறைமுகத்தை விரிவாக்கம் செய்ய, எஸ்ஸார் திட்டமிட்டுள்ளது. 2,450 கோடி ரூபாய் திட்ட செலவில் அமைக்கப்பட்ட ஹசீரா துறைமுகம், மூன்று கோடி டன் சரக்கை கையாளும் திறன் உடையது.
தற்போது, இந்த துறைமுகத்தை விரிவாக்கம் செய்வதற்காக, 550 மீட்டர் உள்ள பரப்பளவை, 1,100 மீட்டராக அதிகரிக்க முடிவு செய்து உள்ளது. இதன் மூலம், அந்த துறைமுகத்தின் பொருட்கள் கையாளும் திறன், ஐந்து கோடி டன்னாக உயரும்.இந்த பணிக்காக, எஸ்ஸார் நிறுவனம், 750 கோடி ரூபாய் முதலீடு செய்ய திட்டமிட்டு உள்ளது. இதையடுத்து, ஹசீரா துறைமுகத்தில் செய்யப்பட்ட முதலீடு, 3,200 கோடி ரூபாயாக உயரும்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|