தங்க நகை­க­ளுக்கு ‘ஹால்மார்க்’ கட்­டா­ய­மா­கி­றதுதங்க நகை­க­ளுக்கு ‘ஹால்மார்க்’ கட்­டா­ய­மா­கி­றது ... போஷ் நிறு­வனம்லாபம் ரூ.379 கோடி போஷ் நிறு­வனம்லாபம் ரூ.379 கோடி ...
அடுத்த ஆண்டு அம­லாகும் சரக்கு மற்றும் சேவை வரியால் பருத்தி ஜவுளி துறைக்கு பாதிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2016
07:07

மும்பை : ‘அடுத்த ஆண்டு அறி­மு­க­மாக உள்ள, சரக்கு மற்றும் சேவை வரியால், பருத்தி சார்ந்த ஜவுளித் துறை பாதிக்க வாய்ப்­புள்­ளது’ என, தர நிர்­ணய நிறு­வ­ன­மான, ‘இக்ரா’ தெரி­வித்­துள்­ளது.
வரும், 2017–18ம் நிதி­யாண்டு, ஏப்ரல் முதல், ஜி.எஸ்.டி., எனப்­படும் சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் அம­லாகும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. தற்­போது நடை­மு­றையில் உள்ள, பல்­வேறு மறை­முக வரி­களை ஒழித்து, ஒரே சீரான வரி விதிப்­பிற்கு, சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் உதவும். இச்­சட்­டத்தின் கீழ், பல்­வேறு துறை­க­ளுக்கு விதிக்க வேண்­டிய வரி விகிதம் குறித்து, தலைமை பொரு­ளா­தார ஆலோ­சகர் அரவிந்த் சுப்­ர­ம­ணியன் தலை­மை­யி­லான குழு, மத்­திய அர­சுக்கு பரிந்­து­ரைத்­துள்­ளது. அதில், ஜவுளித் துறைக்கு தற்­போது விதிக்­கப்­படும், 12.5 சத­வீத கலால் வரியை, 12 சத­வீ­த­மாக குறைத்து நிர்­ண­யிக்­கலாம் என, தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. இது மேலெ­ழுந்­த­வா­ரி­யாக, வரி குறைப்பு போல தோன்­றி­னாலும், இதனால், பருத்தி மற்றும் அது­சார்ந்த ஜவுளித் துறை பாதிக்க வாய்ப்பு உள்­ளது.
செயற்கை நுாலிழை ஜவு­ளி­க­ளுக்கு, 12.5 சத­வீதம் கலால் வரி விதிக்­கப்­ப­டு­கி­றது. இத்­துறை சார்ந்த நிறு­வ­னங்கள், மதிப்பு கூட்­டப்­பட்ட பொருட்­களில், மூலப்­பொ­ருட்­க­ளுக்கு செலுத்­திய வரியை, திரும்பப் பெறு­கின்­றன. பருத்­திக்கு, மத்­திய கலால் வரியில் இருந்து விலக்கு அளிக்­கப்­பட்­டுள்­ளது. அதனால், பருத்­தியை பயன்­ப­டுத்தும் பெரும்­பான்­மை­யான நுாற்­பா­லைகள், மூலப் பொருட்­க­ளுக்கு செலுத்­திய வரியை திரும்பப் பெறும் திட்­டத்தை தேர்வு செய்­வதை தவிர்த்து, உற்­பத்தி அடிப்­ப­டையில், 1 சத­வீத கலால் வரியை செலுத்தி வரு­கின்­றன.
இத்­த­கைய சூழலில், ஜவுளித் துறைக்கு, 12 சத­வீதம் சரக்கு மற்றும் சேவை வரி விதிக்­கப்­பட்டால், பருத்தி சார்ந்த ஜவுளித் துறை­யினர் பாதிக்­கப்­ப­டுவர் என, இக்ரா தெரி­வித்­துள்­ளது. அதே­ச­மயம், சரக்கு மற்றும் சேவை வரியால், அமைப்பு சார்ந்த ஜவுளித் துறை, மேலும் வலுப்­பெறும். இவ்­வரி விதிப்பு, ஜவுளித் துறையில், அமைப்பு சாராமல் இயங்கும் நிறு­வ­னங்­கள், போட்­டியை சமா­ளிக்க முடி­யாமல், அமைப்பு ரீதி­யாக இணை­வ­தற்­கான வாய்ப்பை ஏற்­ப­டுத்தி தரும் என, இக்ரா அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.
‘அரவிந்த் சுப்­ர­ம­ணியன் அளித்த பரிந்­து­ரை­களை, மத்­திய அரசு அமைக்க உள்ள, சரக்கு மற்றும் சேவை வரி விதிப்பு கண்­கா­ணிப்பு குழு அப்­ப­டியே ஏற்கும் என, கூற முடி­யாது. அதனால், பருத்தி சார்ந்த ஜவுளித் துறைக்கு பாதிப்பு ஏற்­படும் என, தற்­போது கூறு­வது சரி­யாக இருக்­காது’ என, ஜவுளித் துறை­யினர் தெரி­வித்­துள்­ளனர்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)