பதிவு செய்த நாள்
29 ஆக2016
06:54
மும்பை : பொருட்களின் விற்பனையை தீர்மானிக்கும் அம்சங்களில், அவற்றை அடைக்க பயன்படுத்தப்படும் பாக்கெட்டுகளுக்கு முக்கிய பங்கு உள்ளது.
கவர்ச்சியான பாக்கெட்டுகள், நுகர்வோரை வாங்கத் துாண்டும். அதில் உள்ள பொருட்களின் தரம், பயன்படுத்தும் போதுதான் தெரியவரும். இதை தவிர்க்க, ‘ஸ்மார்ட் பேக்கேஜிங்’ தொழில்நுட்பம் உதவுகிறது. பாக்கெட்டுகளில், ‘குயிக் ரீடிங்’ தொழில்நுட்பத்தில் அச்சடிக்கப்பட்டுள்ள சின்னத்தை, ஸ்மார்ட் போன் மூலம் ஸ்கேன் செய்தால், உள்ளிருக்கும் பொருள், எப்போது, எங்கு தயாரிக்கப்பட்டது என்பது உள்ளிட்ட அனைத்து விபரங்களையும் அறியலாம்.
பாக்கெட்டில் உள்ள உணவுப் பொருளை சூடு படுத்தி, உண்ணக் கூடிய ‘ஸ்மார்ட் பாக்கெட்’ முறைகளும் ஆய்வில் உள்ளன. பாக்கெட்டின் உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பொருத்தப்பட்டுள்ள ‘சிப்’ மூலம், அடுப்பு வசதியின்றி, உணவுப் பொருட்களை சூடு படுத்தி உண்ணலாம்; பானங்களை குளிர்வித்து பருகலாம். ‘பாலுாட்டும் தாய்மார்களுக்கு, இதுபோன்ற பேக்கிங் முறை வசதியானது’ என, ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஸ்மார்ட்போன் உதவியுடன், மருந்துகளின் அட்டையில் அச்சிட்டுள்ள மின்னணு இலச்சினை ஸ்கேன் செய்து, மருந்து விபரங்களை அறியும் வசதியும் விரைவில் பரவலாக வர உள்ளது. பாக்கெட்டை திறக்கும்போது, உள்ளிருக்கும் உணவுப் பொருள் புதிதாகவும், நறுமணத்துடனும் இருக்க, ‘கிரானுலேஷன் தொழில்நுட்பம்’ உதவுகிறது. நெஸ்லே நிறுவனம், அதன் ‘சூப்’ வகையறாக்களுக்கு, இந்த தொழில்நுட்பத்தில் தான், பாக்கெட்டுகளை தயாரிக்கிறது. இத்தகைய ஸ்மார்ட் பேக்கேஜிங் முறை, விற்பனை உயர வழி வகுக்கும் என, சந்தையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|