பதிவு செய்த நாள்
30 ஆக2016
10:43
மும்பை : வர்த்தக வாரத்தின் இரண்டாம் நாளில் இந்திய பங்குச்சந்தைகள் இன்று(ஆகஸ்ட் 30ம் தேதி) நல்ல உயர்வுடன் ஆரம்பமாகி உள்ளன. குறிப்பாக சென்செக்ஸ் மீண்டும் 28 ஆயிரம் புள்ளிகளை கடந்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில், காலை 9.15 மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 177 புள்ளிகள் உயர்ந்து 28,079.61-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 51.25 புள்ளிகள் உயர்ந்து 8,658.70-ஆகவும் இருந்தன.
உள்ளூர் பங்குகளும் சரி, வெளிநாட்டு பங்குகளும் சரி நல்ல ஏற்றத்துடன் இருப்பதாலும், முதலீட்டாளர்கள் அதிகளவில் பங்குகளை வாங்கி வருவதாலும் இன்றைய வர்த்தகம் நல்ல உயர்வுடன் துவங்கியிருப்பதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.
இன்றைய வர்த்தகத்தில் ஆட்டோமொபைல், எரிவாயு, மருத்துவம் சார்ந்த பங்குகள் உயர்வுடன் காணப்படுகின்றன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|