பதிவு செய்த நாள்
31 ஆக2016
07:21
சென்னை : மெட்பிளஸ் நிறுவனம், தமிழகத்தில், அதிகளவில் மருந்தகங்களை துவக்க முடிவு செய்துள்ளது.
மெட்பிளஸ் ஹெல்த் நிறுவனம், நாடு முழுவதும் உள்ள முக்கிய நகரங்களில், மருந்தகம் மற்றும் இணையதளம் மூலம், மருந்து பொருட்களை விற்பனை செய்து வருகிறது. தற்போது அந்த நிறுவனம், தமிழகத்தில், 500 புதிய மருந்தகங்களை, பிரான்ச்சைஸ் அடிப்படையில் துவக்க முடிவு செய்துள்ளது.
இதுகுறித்து, மெட்பிளஸ் ஹெல்த் சர்வீசஸ் நிறுவனத்தின் நிறுவனர் மதுகர் கங்காதி கூறியதாவது:தற்போது, சென்னையில், 300க்கும் மேற்பட்ட மருந்தகங்களை நடத்தி வருகிறோம். மற்ற மாவட்டங்களிலும் மருந்தகங்கள் உள்ளன. மருந்து பொருட்கள் விற்பனை சிறப்பான அளவில் அதிகரித்து வருகிறது. எனவே, விரிவாக்க நடவடிக்கையில் ஈடுபட திட்டமிட்டு உள்ளோம். அதன்படி, ஒப்பந்த அடிப்படையில், தமிழகத்தில், 500 மருந்தகங்களை துவக்க உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|