பதிவு செய்த நாள்
31 ஆக2016
23:56
புதுடில்லி : ‘ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்’ என, வலைதளங்களில் பொருட்களை விற்கும் நிறுவனங்கள், கோரிக்கை விடுத்துள்ளன.
மேற்குவங்க நிதியமைச்சர் அமித் மித்ரா தலைமையில், ஜி.எஸ்.டி., உயரதிகார குழுவின் முதல் கூட்டம், டில்லியில் நடைபெற்றது. அதில், வலைதள நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்று, வலைதளத்தில் மேற்கொள்ளப்படும் சில்லரை விற்பனைக்கு, ஜி.எஸ்.டி.,யில் இருந்து விலக்க அளிக்க கோரும் மனுவை அளித்தனர்.
இதுகுறித்து, வலைதள நிறுவன பிரதிநிதி ஒருவர் கூறியதாவது:அமேசான், பிளிப்கார்ட், ஸ்நாப்டீல் போன்ற நிறுவனங்கள், வலைதளம் வாயிலாக நுகர்வோருக்கு பொருட்களை விற்பனை செய்கின்றன. இந்நிறுவனங்கள், பொருட்களை தயாரித்து விற்போருக்கும், அப்பொருட்களை வாங்கும் நுகர்வோருக்கும் இடையே, பாலமாக செயல்படுகின்றன. அதனால், தயாரிப்பு மற்றும் விற்பனையில் பங்கு பெறாத தங்களுக்கு, ஜி.எஸ்.டி., பொருந்தாது என்பதால், அந்த வரிவிதிப்பில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என, அவை கோருகின்றன.
வரும், 2017 ஏப்., 1ல், ஜி.எஸ்.டி.,அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கேற்ப, விற்பனை சார்ந்த மென்பொருட்களை உருவாக்கி, இணைப்பது கடினம் என்பதால், போதுமான கால அவகாசம் வழங்க வேண்டும்; தாமதத்திற்கு அபராதம் விதிப்பதில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்றும், நிறுவனங்கள் வலியுறுத்தி உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|