ஜி.எஸ்.டி.,யில் விலக்கு கோரும் வலை­தள நிறு­வ­னங்கள் ஜி.எஸ்.டி.,யில் விலக்கு கோரும் வலை­தள நிறு­வ­னங்கள் ... இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : ரூ.67.06 இந்திய ரூபாய் மதிப்பில் சரிவு : ரூ.67.06 ...
சர்­வ­தேச வாகன துறையில் இந்­தியா முத­லிடம் பிடிக்கும்: அமைச்சர் கட்­கரி மதிப்­பீடு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2016
23:57

புது­டில்லி : ‘‘இந்­திய வாகனத் துறை, உல­க­ளவில் முதல் இடத்தை பிடிப்­ப­தற்­கான ஆற்­ற­லுடன், மிக விரை­வாக வளர்ச்சி கண்டு வரு­கி­றது,’’ என, மத்­திய சாலை போக்­கு­வ­ரத்து மற்றும் நெடுஞ்­சா­லைகள் துறை அமைச்சர் நிதின் கட்­கரி, நம்­பிக்கை தெரி­வித்­துள்ளார்.
அவர், டில்­லியில் நடை­பெற்ற, வாகன உதிரி பாகங்கள் தயா­ரிப்போர் கூட்­ட­மைப்பின் கூட்­டத்தில் மேலும் பேசி­ய­தா­வது: இந்­திய வாகனத் துறை, ஆண்­டுக்கு 4.50 லட்சம் கோடி ரூபாய் விற்­று­மு­த­லுடன், 8 சத­வீத வளர்ச்­சியை கண்டு வரு­கி­றது. அடுத்த, 10 ஆண்­டு­களில், வாகன துறையின் விற்­று­முதல், 20 லட்சம் கோடி ரூபா­யாக உயரும். இந்­திய வாகன துறைக்கு, சர்­வ­தேச அளவில், முதல் இடத்தை பிடிக்கக் கூடிய ஆற்றல் உள்­ள­தாக மதிப்­பி­டப்­பட்­டுள்­ளது.
ஏற்றுமதி :இந்­தி­யாவின் வாகன ஏற்­று­மதி, 70 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் உள்­ளது. இதை உயர்த்த வேண்டும். அதற்கு, புது­மை­யான கண்­டு­பி­டிப்­பு­களும், ஆய்வும் அவ­சியம். அத்­துடன் தரக் கட்­டுப்­பாட்டை கடை­பி­டிப்­ப­திலும் உறு­தி­யாக இருக்க வேண்டும். தரத்தில் சம­ரசம் செய்து கொண்டால், வர்த்­தக வாய்ப்­பு­களை இழக்க நேரிடும். ஏற்­று­ம­தியை அதி­க­ரிப்­பதே நம் பிர­தான நோக்­க­மாக இருக்க வேண்டும். ஏற்­று­ம­தியை ஊக்­கு­விக்க, மத்­திய அரசு ஏரா­ள­மான நட­வ­டிக்­கை­களை எடுத்து வரு­கி­றது.
குறிப்­பாக, நீர்­வழி போக்­கு­வ­ரத்­திற்கும், துறை­மு­கங்­களில் ஏற்­று­மதி வச­தி­களை அதி­க­ரிப்­ப­தற்கும் முக்­கி­யத்­துவம் அளிக்­கப்­ப­டு­கி­றது. புதிய துறை­மு­கங்கள் உரு­வாக்­கப்­ப­டு­கின்­றன; சுல­ப­மாக சரக்­கு­களை கொண்டு வரவும், எடுத்துச் செல்­லவும் அணுகு சாலைகள் அமைக்­கப்­ப­டு­கின்­றன.கடந்த ஆண்டு, மும்பை துறை­மு­கத்தில் இருந்து, 1.58 லட்சம் வாக­னங்கள் ஏற்­று­மதி செய்­யப்­பட்­டன. இது, இந்­தாண்டு, 2 லட்­ச­மாக உயரும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
போக்குவரத்து செலவு :உத்­த­ர­பி­ர­தேச மாநிலம், வார­ணா­சியில் இருந்து, மேற்கு வங்­கத்தின் ஹால்டி நகர் வரை, நீர்­வழிப் போக்­கு­வ­ரத்து துவங்­கி­யுள்­ளது. இதில், முதற்­கட்­ட­மாக, கார்கள் கொண்டு செல்­லப்­ப­டு­கின்­றன. இதனால், அசாம் மற்றும் மேற்கு வங்­கத்தில், கார் விலையில், 4,000 – 5,000 ரூபாய் வரை குறையும். மத்­திய அரசு, 7,500 கி.மீ., நீள­முள்ள கட­லோரம் மற்றும், 20,000 கி.மீ., அள­விற்­கான, உள்­நாட்டு நீர்­வழிப் பாதையில் சரக்கு போக்­கு­வ­ரத்து வச­தி­களை ஏற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கையில் ஈடு­பட்­டுள்­ளது. இதன் மூலம், நிறு­வ­னங்­களின் சரக்கு போக்­கு­வ­ரத்து செலவு, குறிப்­பி­டத்­தக்க அள­விற்கு குறையும். இவ்­வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)