பதிவு செய்த நாள்
08 செப்2016
06:34
பெங்களூரு : தொழிலதிபர் விஜய் மல்லையாவுக்கு, யு.பி.எல்., மற்றும் அதன் துணை நிறுவனங்களில் உள்ள, 3,635 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகள், சட்ட விரோத பணப் பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் முடக்கப்படுவதாக, இரு நாட்களுக்கு முன், அமலாக்க இயக்குனரகம் தெரிவித்தது. இந்நிலையில், பெங்களூரில், யு.பி.எல்., ஆண்டு பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
அதில், யு.பி.எல்., இயக்குனர் சுக் யோகேந்திர பால் கூறியதாவது: யு.பி.எல்., நிறுவனத்தின் சொத்துகள் மற்றும் விஜய் மல்லையாவின் பங்குகள், இதுவரை முடக்கப்படவில்லை. இது தொடர்பாக, சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி ஒருவரிடம், சட்ட ஆலோசனை கோரப்பட்டு உள்ளது. நிறுவனங்கள் சட்டப்படி, விஜய் மல்லையா, தொடர்ந்து யு.பி.எல்., தலைவராக நீடிப்பார்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சட்ட விரோத பணப் பரிமாற்றம் தொடர்பாக, அமலாக்க இயக்குனரகம், இரு அறிக்கைகள் மூலம், விஜய் மல்லையாவின், 8,041 கோடி ரூபாய் சொத்துகளை முடக்கியுள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|