பதிவு செய்த நாள்
21 செப்2016
07:37
சென்னை : இந்தியாவில் சிறப்பாக செயல்பட்டு வருவதாக, டெய்ம்லர் பைனான்சியல் சர்வீசஸ் இந்தியா நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் பிரெட் விக் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் கூறியதாவது:டெய்ம்லர் ஏ.ஜி., நிறுவனத்தின் துணை நிறுவனமான டெய்ம்லர் பைனான்சியல் சர்வீசஸ், மெர்சிடஸ் பென்ஸ் கார் மற்றும் டெய்ம்லர் டிரக் வாகனங்கள் வாங்குவதற்கு கடன் வழங்கி வருகிறது. கடந்த, 2011ம் ஆண்டில், இந்தியாவில், ஐந்து கோடி அமெரிக்க டாலர் முதலீட்டில் தொழில் துவங்கினோம். கடந்த ஐந்து ஆண்டுகளில், 28 ஆயிரம் வாகனங்களுக்கு கடன் உதவி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில், எங்கள் நிறுவனத்தின் செயல்பாடு சிறப்பாக உள்ளது. இதுவரை, எங்களின் வியாபாரம், 100 கோடி யூரோக்களை தாண்டியுள்ளது. எங்களின் வளர்ச்சி, தற்போது உள்ளதை விட, வரும் காலத்தில் இரண்டு – மூன்று மடங்கு அதிகரிக்க வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|