பதிவு செய்த நாள்
29 செப்2016
01:46
சென்னை : வீடு, காலி மனைகளில் முதலீடு செய்வதை போல், வணிக கட்டடங்களிலும் முதலீடு செய்யும் திட்டத்தை புரவாங்கரா நிறுவனம் துவக்கி உள்ளது.
இது குறித்து, ‘புரவாங்கரா புராஜக்ட்ஸ்’ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர், அனிஷ் புரவாங்கரா கூறியதாவது:பலரும், வீடு, காலி மனைகளில் மட்டும் முதலீடு செய்கின்றனர். ஆனால், வணிக கட்டுமான திட்டங்களில் முதலீடு செய்வதில்லை. புரவாங்கரா, வணிக கட்டடங்களிலும் முதலீடு செய்யும் திட்டத்தை துவக்கியுள்ளது. அதன்படி, எங்கள் நிறுவனம், சென்னை, துரைப்பாக்கத்தில், ஐ.டி., நிறுவன அலுவலக கட்டடத்தை, 75 கோடி ரூபாய் செலவில் அமைத்துள்ளது. இதை, 350 சதுர அடி, 28 லட்சம் ரூபாய் என்ற விலையில் வாங்கலாம். வாங்குகிறவரின் பெயரில் பதிவு செய்து புரவாங்கரா, ஐ.டி., நிறுவனங்களுக்கு, வாடகைக்கு விடும். வாடகை தொகை, உரிமையாளரிடம் வழங்கப்படும். அதற்கு, 10 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|