சர்க்­கரை உற்­பத்தி 7 சத­வீதம் குறையும்சர்க்­கரை உற்­பத்தி 7 சத­வீதம் குறையும் ... சரிவிலிருந்து மீண்டது ரூபாயின் மதிப்பு : 66.69 சரிவிலிருந்து மீண்டது ரூபாயின் மதிப்பு : 66.69 ...
இ.எம்.இ.ஐ.ஏ., பிராந்­தி­யத்தில்...புதிய பங்கு வெளி­யீ­டு­களில்இந்­தியா அபார சாதனை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

30 செப்
2016
00:53

புது­டில்லி;‘ஐரோப்பா, மத்­திய கிழக்கு, இந்­தியா மற்றும் ஆப்­ரிக்­காவை உள்­ள­டக்­கிய, இ.எம்.இ.ஐ.ஏ., பிராந்­தி­யத்தில், இந்­தியா, மிக அதி­க­ளவில் பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொண்டு, 180 கோடி டாலர் திரட்­டி­யுள்­ளது’ என, ‘யர்னஸ்ட் அண்ட் யங்’ நிறு­வ­னத்தின் ஆய்­வ­றிக்­கையில் கூறப்­பட்டு உள்­ளது.
அதன் விபரம் :முத­லீட்­டா­ளர்­க­ளி­டையே, இந்­திய பொரு­ளா­தாரம் குறித்த நம்­பிக்கை அதி­க­ரித்­துள்­ளது. மத்­திய அரசின் செயல்­பா­டுகள், பங்­குச்­சந்தை கட்­டுப்­பாட்டு அமைப்பின் சீர்­தி­ருத்த நட­வ­டிக்­கைகள் ஆகி­ய­வையும், இந்த நம்­பிக்­கைக்கு வலு சேர்த்­துள்­ளன. இதன் கார­ண­மாக, பல்­வேறு நிறு­வ­னங்கள் மேற்­கொள்ளும் புதிய பங்கு வெளி­யீ­டு­களில், முத­லீட்­டா­ளர்கள் ஆர்­வ­முடன் முத­லீடு செய்து வரு­கின்­றனர்.
500 கோடி டாலர்இதனால், இந்­தாண்டு துவங்கி இது­வரை, பி.எஸ்.இ., எனப்­படும், மும்பை பங்­குச்­சந்தை; என்.எஸ்.இ., என அழைக்­கப்­படும், தேசிய பங்­குச்­சந்தை ஆகி­ய­வற்றில், 56 நிறு­வ­னங்கள் புதிய பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொண்டு, 180 கோடி டாலர் திரட்­டி­யுள்­ளன. இ.எம்.இ.ஐ.ஏ., பிராந்­தி­யத்தில், இந்­திய பங்­குச்­சந்­தைகள் தான், மிக அதி­க­ளவில், புதிய பங்கு வெளி­யீ­டு­களை மேற்­கொண்டு உள்­ளன. ஜூலை – செப்., 29 வரை­யி­லான காலத்தில், மும்பை பங்­குச்­சந்தை மற்றும் அதன் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கான பிரிவில், 15 புதிய பங்கு வெளி­யீ­டுகள் மேற்­கொள்­ளப்­பட்­டன. இதே காலத்தில், லண்டன் பங்­குச்­சந்தை மற்றும் அதன் சிறிய, நடுத்­தர நிறு­வ­னங்­க­ளுக்­கான பிரிவில், ஏழு புதிய பங்கு வெளி­யீ­டுகள் மட்­டுமே மேற்­கொள்­ளப்­பட்டு உள்­ளன. பல நிறு­வ­னங்கள், புதிய பங்கு வெளி­யீ­டுகள் மூலம், சரா­ச­ரி­யாக, 10 கோடி டால­ருக்கு மேல் திரட்­டி­யுள்­ளன. அத­ன­டிப்­ப­டையில், இந்­தாண்டு இறு­திக்குள், பங்கு வெளி­யீ­டு­களில், 500 கோடி டால­ருக்கு மேல் திரட்­டப்­படும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.
வலிமையான பொருளாதாரம்
உலக நாடு­களில், புதிய பங்கு வெளி­யீ­டுகள் தேக்கம் கண்­டுள்ள நிலையில், இந்­தியா வளர்ச்சி கண்டு வரு­வது பாராட்­டத்­தக்­கது. இந்­தாண்டு, இது­வரை, சர்­வ­தேச அளவில் புதிய பங்கு வெளி­யீ­டுகள் மூலம், 7,940 கோடி டாலர் திரட்­டப்­பட்டு உள்­ளது. இது, கடந்த ஆண்டு, இதே காலத்தில்திரட்­டப்­பட்­டதை விட, 39 சத­வீதம் குறை­வாகும். அது போல, புதிய பங்கு வெளி­யீ­டு­களின் எண்­ணிக்­கையும், 23 சத­வீதம் சரி­வ­டைந்து, 704 ஆக குறைந்­துள்­ளது. இந்­தி­யாவின் வலி­மை­யான பொரு­ளா­தாரம், நிறு­வ­னங்­க­ளுக்கு ஆத­ர­வாக செயல்­படும் மத்­திய அரசு ஆகி­யவை கார­ண­மாக, கடந்த ஆண்டை விட, 2017ல், அதி­க­ளவில் புதிய பங்கு வெளி­யீ­டுகள் இருக்கும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)