பதிவு செய்த நாள்
15 அக்2016
06:57
மும்பை : மும்பை பங்கு சந்தையில், 154 சிறிய, நடுத்தர நிறுவனங்கள் பங்குகளை வெளியிட்டு, 1,193 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளன.
பெரிய நிறுவனங்களுக்கு, புதிய தொழில்கள் துவங்கவும், விரிவாக்க நடவடிக்கைகளில் ஈடுபடவும் நிதி தேவைப்படுகிறது. அவை, தங்களுக்கு தேவையான நிதியை, மும்பை மற்றும் தேசிய பங்கு சந்தையில், பங்குகளை வெளியிட்டு திரட்டிக் கொள்கின்றன. சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள், பங்குகளை வெளியிட்டு நிதி திரட்ட, ‘செபி’ அமைப்பு, மும்பை பங்கு சந்தைக்கு அனுமதி வழங்கியது. இதையடுத்து, அந்நிறுவனங்கள் பங்கு வெளியிடும் பிரிவை, மும்பை பங்கு சந்தை, 2012 மார்ச், 13ல் துவக்கியது. இதுவரை, மும்பை பங்கு சந்தையில், சிறிய மற்றும் நடுத்தர பிரிவில், 154 நிறுவனங்கள், பங்குகளை வெளியிட்டு, 1,193 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளன. அந்நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு, 13 ஆயிரத்து, 893 கோடி ரூபாய் என்றளவில் உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|