பதிவு செய்த நாள்
21 அக்2016
06:06
சென்னை : இத்தாலி நாட்டைச் சேர்ந்த, போன்பிக்லியோலி டிரான்ஸ்மிஷன்ஸ் நிறுவனம், இந்தியாவில், சென்னை, புனே நகரங்களில் விரிவாக்க திட்டங்களுக்காக, 85 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது.
சென்னயில், திருமுடிவாக்கத்திலும், ஸ்ரீபெரும்புதுாருக்கு அருகில் மண்ணுாரிலும், இந்நிறுவனத்திற்கு தொழிற்சாலைகள் உள்ளன. இங்கு, கியர்பாக்ஸ்கள் மற்றும் கியர் மோட்டார்கள் தயாரிக்கப்படுகின்றன. தற்போது இந்நிறுவனம், விரிவாக்க நடவடிக்கைகளில் இறங்கி இருக்கிறது.
இது குறித்து, போன்பிக்லியோலி குழுமத்தின் தலைவர், சோனியா போன்பிக்லியோலி கூறியதாவது: திருமுடிவாக்கம் தொழிற்சாலைக்கு அருகில், மேலும் ஒரு புதிய தொழிற்சாலை உருவாக்கப்பட உள்ளது. அதே போல், புனேவிலும், புதிய தொழிற்சாலை, 2017 மார்ச்சில் உருவாகும். எங்கள் நிறுவனம், இந்த ஆண்டில் தன், 60வது ஆண்டு விழாவை கொண்டாடுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|