பதிவு செய்த நாள்
04 நவ2016
10:16
மும்பை : ஜிஎஸ்டி தொடர்பான ஆலோசனை கூட்டம் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நேற்று நடந்தது. இதனால் வரி விதிப்பு தொடர்பான புதிய அறிவிப்புக்கள் இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் நம்பிக்கையுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன.
வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (நவம்பர் 4), வர்த்தக நேர துவக்கத்தின் போது (காலை 9 மணி நிலவரம்) சென்செக்ஸ் 38.30 புள்ளிகள் உயர்ந்து 27,468.58 புள்ளிகளாகவும், நிப்டி 14.45 புள்ளிகள் உயர்ந்து 8499.40 புள்ளிகளாகவும் உள்ளன. ஐடிசி, சிப்லா, ஓஎன்ஜிசி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றத்துடனும், டிசிஎஸ், லுபின், என் அன் டி உள்ளிட்ட நிறுவன பங்குகள் சரிவுடனும் காணப்படுகின்றன.
அமெரிக்க அதிபர் தேர்தல் மீதான நம்பிக்கை அதிகரித்திருப்பதால் அமெரிக்க பங்குச்சந்தைகள் எதிர்பாராத வளர்ச்சியை கண்டுள்ளன. இதன் காரணமாக சர்வதேச சந்தையில் ஆசிய பங்குகள் சரிவுடன் காணப்படுகின்றன. ஜப்பான் உள்ளிட்ட ஆசிய நாடுகளின் பங்குச்சந்தைகளும் சரிவுடன் காணப்படுகின்றன. ஜிஎஸ்டி குறித்த புதிய அறிவிப்பின் மீதான எதிர்பார்ப்பு, இந்திய ரூபாயின் மதிப்பில் ஏற்பட்டுள்ள உயர்வு ஆகிய இந்திய பங்குச்சந்தைகளின் ஏற்றத்திற்கு காரணமாக கூறப்படுகிறது.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|