பதிவு செய்த நாள்
09 நவ2016
23:59
புதுடில்லி : வலைதளங்களில் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும், அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்கள், 1,000 ரூபாய்க்கு மேற்பட்ட பொருட்களை, ரொக்கத்திற்கு விற்பனை செய்வதை நிறுத்தியுள்ளன.
இது குறித்து, பிளிப்கார்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறியதாவது, ‘மத்திய அரசு, 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, அறிவித்துள்ளது. இதையடுத்து, 1,000 ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களை, ரொக்கத்திற்கு விற்பனை செய்வதை, நிறுவனம் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது’ என்றார்.
அமேசான் நிறுவனமும், அதன் வலைதளத்தில், 1,000 ரூபாய்க்கு மேற்பட்ட மதிப்புள்ள பொருட்களை, ரொக்கத்திற்கு வாங்கும் பிரிவை முடக்கி வைத்துள்ளது. இதே போல, உணவுப் பொருட்கள் துறையில் உள்ள வலைதள நிறுவனங்களும், ரொக்க விற்பனையை நிறுத்தி, ‘டெபிட், கிரெடிட்’ கார்டு அல்லது ‘வாலட்’ பணப் பரிவர்த்தனைகளை மட்டும் தொடருவதாக அறிவித்துள்ளன.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|