பதிவு செய்த நாள்
13 நவ2016
01:36
புதுடில்லி:மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறியதாவது:மத்திய அரசு, கணினி சார்ந்த தகவல் பரிவர்த்தனைகளின் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக, தேசிய அளவில், கணினி அவசர இடர் நீக்கும் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுஉள்ளது.
இந்த அமைப்பின் கீழ், மின்சாரம், வங்கி உள்ளிட்ட அனைத்து துறைகளுக்கும், தனித்தனியே, கணினி செயல்பாடுகளை பாதுகாக்கும் அமைப்புகள் ஏற்படுத்தப்படும். அதுபோல, தகவல் தொழில்நுட்பம் சார்ந்த அடிப்படை கட்டமைப்பைக் கொண்டுள்ள தனியார் நிறுவனங்களும், ஒருங்கிணைந்த கணினி செயல்பாடுகளின் பாதுகாப்பிற்கு, தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டும். இதன் மூலம், கணினி ஒருங்கிணைப்பை சீர்குலைப்பது, மோசடி செய்வது உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை சமாளிக்கலாம். இந்தியாவில், இந்தாண்டு, ஜூன் நிலவரப்படி, 46.20 கோடி பேர் இணையத்தை பயன்படுத்துகின்றனர்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|