பதிவு செய்த நாள்
06 டிச2016
03:29
புதுடில்லிடொயொட்டா நிறுவனம், ஜன., 1 முதல், வாகனங்களின் விலையில், 3 சதவீதம் வரை உயர்த்த முடிவு செய்துள்ளது.டொயொட்டா கிரில்லோஸ்கர் மோட்டார் நிறுவனம், 2017 ஜன., 1 முதல், வாகனங்களின் விலையில், 3 சதவீதம் வரை அதிகரிக்க முடிவு செய்திருக்கிறது. மூலப்பொருட்கள் விலை உயர்வு போன்ற காரணங்களால், இந்த விலையேற்ற முடிவுக்கு, டொயொட்டா நிறுவனம் வந்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் மூத்த துணைத் தலைவர்களில் ஒருவருமான, என்.ராஜா கூறியதாவது:உருக்கு, அலுமினியம், காப்பர் உள்ளிட்ட மூலப்பொருட்களின் விலை, கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இதனால், எங்கள் உற்பத்தி செலவு அதிகரித்துள்ளது. மேலும், அன்னிய செலாவணி விகிதங்களில் ஏற்படும் மாற்றங்களும், எங்களுக்கு அதிகமான நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் போது விலை அதிகமாகிறது. குறிப்பாக, ஜப்பானிலிருந்து இறக்குமதி செய்யும் போது, அதிக விலை கொடுக்க வேண்டியதாகிறது. இதன் காரணமாக, 2017 ஜன., முதல், எங்கள் வாகனங்களின் விலையை, 3 சதவீதம் வரை அதிகரிக்க இருக்கிறோம்.இருப்பினும், விற்பனை குறையாமல் இருக்க, பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவும் இருக்கிறோம்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|