பதிவு செய்த நாள்
14 டிச2016
03:07
புதுடில்லி:மைக்ரோசாப்ட் நிறுவனம், டில்லியில் அமைத்துள்ள, சைபர் செக்யூரிட்டி மையத்தை, செயல்பாட்டுக்கு கொண்டு வந்து உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த, மைக்ரோசாப்ட், மென்பொருள் துறையில் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது. இந்நிறுவனத்திற்கு, சர்வதேச அளவில், ஏழு இடங்களில், ‘சைபர் செக்யூரிட்டி என்கேஜ்மென்ட்’ என்ற மையங்கள் உள்ளன. இவற்றின் மூலம், சைபர் குற்றங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மைக்ரோசாப்ட்,இந்தியாவில் முதன்முறையாக, டில்லி யில், ‘சைபர் செக்யூரிட்டி’ மையத்தை அமைத்துள்ளது. இந்த மையத்தின் மூலம், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில், இணையதளம் தொடர்பான குற்றங்களை கண்காணித்து, தீர்வு காண உள்ளது. தற்போது, அந்த மையம் செயல்பாட்டுக்கு வந்துள்ளது.இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘டில்லியில் அமைக்கப்பட்டுள்ள சைபர்செக்யூரிட்டி மையத்தின் மூலம், நாடு முழுவதும் உள்ள இணைதயள குற்றங் கள் கண்காணிக்கப்படும்’ என்றார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|