சுற்­றுலா துறையை மேலும் முறைப்­ப­டுத்­தினால்ஐ.டி., துறையின் வளர்ச்­சியை விஞ்சும்சுற்­றுலா துறையை மேலும் முறைப்­ப­டுத்­தினால்ஐ.டி., துறையின் வளர்ச்­சியை ... ... இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம் இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்ற - இறக்கம் ...
கிரெடிட் கார்டு கட்­ட­ணங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

16 ஜன
2017
03:02

கிரெடிட் கார்டு பயன்­பாட்டில் கவ­ன­மாக இருப்­பது அவ­சியம். அதே போல கிரெடிட் கார்டு கட்­ட­ணங்கள் குறித்தும் கவ­ன­மாக இருக்க வேண்டும். கிரெடிட் கார்டு வச­தி­யா­னது, பல­வித அனு­கூ­லங்­களை கொண்­டது; என்­றாலும் அதற்கு ஒரு விலை இருக்­கி­றது. ஆம், கிரெடிட் கார்டு பயன்­பாடு பல­வித கட்­ட­ணங்­களை கொண்­டி­ருக்­கி­றது. பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கைக்குப் பிறகு நகர்­புற மக்­க­ளிடம் கிரெடிட் கார்டு பயன்­பாடு அதி­க­ரித்­துள்ள நிலையில், இந்த கட்­ட­ணங்­களை அறிந்­தி­ருப்­பது அவ­சியம்.
ஆரம்ப கட்­டணம் :கிரெடிட் கார்டு பயன்­ப­டுத்த துவக்க கட்­டணம் செலுத்த வேண்டும். வங்­கிகள் பொது­வாக அனு­மதி கட்­டணம் (ஜாயினிங் பீ) மற்றும் ஆண்டு கட்­ட­ணத்தை வசூ­லிக்­கின்­றன. என்­றாலும் சில கார்டு நிறு­வ­னங்கள் இவை இல்­லாமல் இல­வ­ச­மா­கவும் வழங்­கலாம். அனு­மதி கட்­டணம், 200 ரூபாயில் இருந்து துவங்­கு­கி­றது. இது, 25,000 ரூபாய் வரை செல்­லலாம். ஆண்டு கட்­டணம், 299 முதல் 800 ரூபாய் வரை இருக்­கலாம். சில கார்டு நிறு­வ­னங்கள், முத­லாண்டில் சலுகை அளித்து கட்­ட­ணங்­களை ரத்து செய்­யலாம். இரண்டாம் ஆண்டில் கவனம் தேவை.
அப­ராத தொகை :கிரெடிட் கார்டு பில் தொகையை உரிய நேரத்தில் செலுத்­தா­விட்டால் அந்த தொகைக்­கான வட்டி செலுத்த வேண்டும். பொது­வாக வட்டி விகிதம் ஆண்­டுக்கு 22 முதல் 48 சத­வீதம் வரை அமை­கி­றது. தாம­த­மாக செலுத்­து­வ­தற்­கான கட்­டணம் (இது வங்­கிக்கு வங்கி மாறு­படும்) மற்றும் வட்டி மீதான சேவை வரியை சேர்த்துக் கொண்டால் கணி­ச­மான தொகை­யாக இருக்­கலாம். தாம­தத்­திற்­கான கட்­டணம், 750 ரூபாய் வரை செல்ல வாய்ப்­புள்­ளது. கார்டு தொலைந்தால் அல்­லது திருடு போனால் புதிய கார்­டிற்கு கட்­டணம் உண்டு.
ரொக்க கட்­டணம் :எல்லா கார்­டு­க­ளுக்கும் கடன் வரம்பு உண்டு. இந்த கடன் வரம்­புக்கு அதி­க­மாக பயன்­ப­டுத்­தினால், கூடுதல் தொகையில், 2.5 சத­வீதம் வரை அப­ராதம் விதிக்­கப்­ப­டலாம். மேலும், இது உங்­களின் கிரெடிட் ஸ்கோரையும் பாதிக்கும். கார்டு மூலம் ரொக்­கப்­பணம் எடுக்­கலாம். ஆனால், கிரெடி கார்டு மூலம் ரொக்க முன்­பணம் எடுக்கும் போது அதற்கு கட்­டணம் செலுத்த வேண்டும். பொது­வாக இது ரொக்­க­மாக எடுக்கும் தொகையில், 2.5 சத­வீ­த­மாக இருக்­கலாம்.
பரி­வர்த்­தனை முறை :பில் தொகையை எப்­படி செலுத்­து­கி­றீர்கள் என்­ப­தையும் கவ­னிக்க வேண்டும். வங்கி கிளை அல்­லது ஏ.டி.எம்., மூலம் ரொக்­க­மாக செலுத்­தினால் செயல்­முறை கட்­டணம் செலுத்த வேண்டும். வெளியூர் காசோலை என்றால் அதற்கும் செயல்­முறை கட்­டணம் உண்டு. காசோலை தொகை மற்றும் கார்டு நிறு­வ­னத்­திற்கு ஏற்ப இது அமை­யலாம். நெட் பாங்கிங் அல்­லது மொபைல் பாங்கிங் மூலம் பணம் செலுத்­து­வதே சிறந்த வழி. இவைத்­த­விர ஒரு சில வர்த்­தக நிறு­வ­னங்கள் தாங்கள் செலுத்த வேண்­டிய தொகையில் ஒரு பகு­தியை கூடுதல் கட்­ட­ண­மாக வசூ­லிக்­கலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)