பதிவு செய்த நாள்
24 ஜன2017
17:45
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இரண்டு வாரங்களில் இல்லாத அளவுக்கு அதிக ஏற்றத்துடன் முடிந்துள்ளது. வர்த்தகவாரத்தின் இரண்டாம் நாளான இன்று இந்திய பங்குச்சந்தைகள் அதிக ஏற்றத்துடன் துவங்கின. உலகளவில் பங்குச்சந்தைகளில் காணப்பட்ட ஏற்றத்தாலும், முன்னணி நிறுவன பங்குகள் உயர்ந்ததாலும் இன்றைய வர்த்தகம் உயர்வுடன் ஆரம்பமானது. தொடர்ந்து வர்த்தகம் நாள்முழுக்க ஏற்றத்துடனேயே முடிந்தன.
இன்றைய வர்த்தகநேர முடிவில் மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 258.24 புள்ளிகள் உயர்ந்து 27,375.58-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 84.30 புள்ளிகள் உயர்ந்து 8,475.80-ஆகவும் இருந்தன.
இன்றைய வர்த்தகத்தில் சென்செக்ஸை அளவிட உதவும் 30 நிறுவன பங்குகளில் 26 நிறுவன பங்குகள் உயர்ந்தும், 4 நிறுவன பங்குகள் சரிந்தும் முடிந்தன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|