சமச்சீரான வரிவிதிப்பு வேண்டும்:ஓட்டல் துறையினர் கோரிக்கைசமச்சீரான வரிவிதிப்பு வேண்டும்:ஓட்டல் துறையினர் கோரிக்கை ... ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.68.08 ரூபாயின் மதிப்பு சரிவு - ரூ.68.08 ...
‘நோமுரா’ நிறுவனம் கணிப்பு:நாட்டின் பணப்புழக்க பிரச்னை மார்ச்சில் இயல்பு நிலைக்கு திரும்பும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 ஜன
2017
00:53

மும்பை:‘ஏற்­க­னவே மதிப்­பிட்­டதை விட, நாட்­டின் பணப்­பு­ழக்­கம் வேக­மாக சீர­டைந்து வரு­வ­தால், மார்ச் இறு­திக்­குள், இயல்பு நிலை திரும்­பும்’ என, ஜப்­பா­னைச் சேர்ந்த, நிதிச் சேவை நிறு­வ­ன­மான, ‘நோமுரா’ தெரி­வித்­துள்­ளது.
இது தொடர்­பாக, இந்­நி­று­வ­னம் வெளி­யிட்­டுள்ள அறிக்கை:கடந்த ஆண்டு, நவ., 4 நில­வ­ரப்­படி, மொத்த உள்­நாட்டு உற்­பத்தி மதிப்­பில், நாட்­டின் பணப்­பு­ழக்க விகி­தம், 11.8 சத­வீ­த­மாக இருந்­தது. இந்­நி­லை­யில், நவ., 8ல், உயர் மதிப்பு ரூபாய் நோட்­டு­கள் செல்­லாது என, மத்­திய அரசு அறி­வித்­தது.இத­னால், புழக்­கத்­தில் இருந்த, 84 சத­வீத உயர் மதிப்­புள்ள செல்­லாத நோட்­டு­களை திரும்­பப் பெறும் நிலை ஏற்­பட்­டது. உட­ன­டி­யாக, அந்த அள­விற்­கான புதிய கரன்­சி­களை, புழக்­கத்­தில் விட இய­லாத கார­ணத்­தால், நாட்­டின் பணப்­பு­ழக்­கம் வெகு­வாக குறைந்­தது.
இத­னால், நடப்பு ஜன., 20 நில­வ­ரப்­படி, மொத்த உள்­நாட்டு உற்­பத்தி மதிப்­பில், பணப்­பு­ழக்க விகி­தம், 11.8 சத­வீ­தத்­தில் இருந்து, 6.5 சத­வீ­த­மாக சரி­வ­டைந்­தது.தற்­போது, செல்­லாத ரூபாய் நோட்­டு­களின் டிபா­சிட் முடி­விற்கு வந்­துள்­ளது. அத்­து­டன், ரிசர்வ் வங்கி புதிய ரூபாய் நோட்­டு­களை, இடை­வி­டாது அச்­ச­டித்து, புழக்­கத்­தில் விட்டு வரு­கிறது. இதன் கார­ண­மாக, நாட்­டில் பணப்­பு­ழக்­கம் அதி­க­ரிக்­கத் துவங்­கி­யுள்­ளது.
இதே நிலை தொட­ரு­மா­னால், மார்ச்­சில், மொத்த உள்­நாட்டு உற்­பத்தி மதிப்­பில், பணப்­பு­ழக்க விகி­தம், 9 சத­வீ­தத்தை எட்­டும் சாத்­தி­யக் கூறு­கள் உள்ளன. இது, பொரு­ளா­தார நட­வ­டிக்­கை­களை ஸ்தி­ரப்­ப­டுத்த போது­மா­ன­தா­ன­தாக இருக்­கும்.அத்­து­டன், மின்­னணு பணப் பரி­வர்த்­த­னை­கள் அதி­க­ரித்­துள்­ள­தால், பண மதிப்பு நீக்க நட­வ­டிக்­கை­யால் ஏற்­பட்ட பொரு­ளா­தார பாதிப்­பில் இருந்து, இந்­தியா, மிக விரை­வாக மீளும்.
பணப்­பு­ழக்­கம் பெரு­கி­னால், மக்­களின் தேவை அதி­க­ரித்து, பல்­வேறு பொருட்­களின் விற்­பனை உய­ரும். இது, பல்­வேறு துறை­களின் வளர்ச்­சிக்கு துணை புரி­யும்.இத்­த­கைய சூழ­லில், புதிய தொழில்­கள், முத­லீ­டு­கள் அதி­க­ரிக்க வாய்ப்பு ஏற்­படும்.தற்­போது, வங்­கி­களின் வட்டி விகி­தம் குறைந்­துள்­ளது. எனி­னும், பொரு­ளா­தார மந்­த­நி­லை­யால், வங்­கி­களின் கடன் வளர்ச்சி சுணக்­க­மாக உள்­ளது.
பணப்­பு­ழக்­கம் இயல்பு நிலைக்கு திரும்­பும் போது, வங்­கி­களின் தொழில் துறை சார்ந்த கடன் வளர்ச்சி அதி­க­ரிக்­கும். அதை மேலும் ஊக்­கு­விக்­கும் வகை­யில், வங்­கி­களின் வட்டி விகி­தங்­கள் குறை­ய­வும் வாய்ப்­புள்­ளது.இந்­தாண்டு, ஜூலைக்கு பின், இந்­திய பொரு­ளா­தா­ரம் வெற்­றிப் பாதை­யில் நடை­போ­டும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.இவ்­வாறு அதில் கூறப்­பட்­டுள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)