பதிவு செய்த நாள்
06 பிப்2017
23:52
புதுடில்லி : இந்தியாவில், மின்னணு பணப் பரிவர்த்தனைகள் சூடுபிடித்து வரும் நிலையில், போலி, ‘இ – வாலட்’ நிறுவனங்கள் தலையெடுத்து, வாடிக்கையாளர்களின் பணத்தை மோசடி செய்யும் வாய்ப்பு உள்ளது என, ‘காஸ்பர்ஸ்கை’ நிறுவனம் எச்சரித்துள்ளது.
இந்நிறுவனம், கணினி பரிவர்த்தனைகளுக்கான பாதுகாப்பு மென்பொருள் தீர்வுகளை வழங்கி வருகிறது. இதன், தெற்காசிய பிரிவின் நிர்வாக இயக்குனர், அல்டாப் ஹால்டி கூறியதாவது: இந்தியாவில், மின்னணு பணப் பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ச்சி பெற்று வருகின்றன. அதற்கேற்ப, அத்துறையில் உள்ள நிறுவனங்கள், அவற்றின், ‘ஆப்’களில் பலமான பாதுகாப்பு அம்சங்கள் உள்ளதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.
மென்பொருட்கள்இருமுறை அங்கீகரிக்கும் நடைமுறையின்படி, வாடிக்கையாளர்களுக்கு பணப் பரிவர்த்தனை சேவையை வழங்க வேண்டும். இதன் மூலம், பாதுகாப்பான பணப் பரிவர்த்தனையை மேற்கொள்ள முடியும்.‘இ – வாலட்’ எனப்படும், மின்னணு பணப் பை சேவையில், நிறுவனங்கள், போலி ஆப்களை வெளியிட்டு, நுகர்வோரை ஏமாற்ற அதிக வாய்ப்பு உள்ளது. இந்த, ஆப்களின் வணிக சின்னங்கள், அசல் நிறுவனங்களின் சின்னங்களை போன்ற தோற்றத்தில் இருக்கும்.ஆனால், எழுத்துக்களில் மாற்றம் இருக்கும். அதை வைத்து, அந்த ஆப், அசலா அல்லது போலியா என்பதை கண்டுபிடித்து விடலாம்.
அதனால், ஆப்களை பதிவிறக்கும் முன், எச்சரிக்கையுடன், நிதான போக்கை கடைபிடிப்பது அவசியம். அத்துடன், கணினி பாதுகாப்புக்காக வைரஸ் தடுப்பு சாப்ட்வேர்களை பயன்படுத்துவது போல, ஸ்மார்ட் போன்களிலும், பாதுகாப்பு மென்பொருட்களை நிறுவ வேண்டும்.இதன் மூலம், பாதுகாப்பான பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளலாம். அத்துடன், நம் பரிவர்த்தனை ரகசியங்கள், கம்ப்யூட்டர் நாசகாரர்கள் கையில் சிக்குவதையும் தவிர்க்கலாம்.
எச்சரிக்கைஇந்தியாவில், இதுவரை போலி, ‘இ – வாலட்’ ஆப்களால், எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வங்கிகள், மின்னணு பணப் பை நிறுவனங்கள் உள்ளிட்டவை, பாதுகாப்பான பணப் பரிவர்த்தனைகளுக்காக, வலிமையான சாப்ட்வேர்களை நிறுவியுள்ளன. அதனால், வாடிக்கையாளர்கள் தான், மின்னணு பணப் பரிவர்த்தனைக்கான நிறுவனத்தை தேர்வு செய்வதிலும், அதன் ஆப்களை பதிவிறக்கம் செய்வதிலும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.
பாதுகாப்பானதுமத்திய அரசு, 2016 நவ., 8ல், பண மதிப்பு நீக்க நடவடிக்கையை அறிவித்தது. இதை தொடர்ந்து, மின்னணு பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.மத்திய அரசு, பாதுகாப்பான மின்னணு பணப் பரிவர்த்தனைகளுக்கு, ‘பீம்’ என்ற செயலியை, கடந்தாண்டு, டிச., 30ல் அறிமுகப்படுத்தியது. இதை, கூகுள் பிளே ஸ்டோர் மூலம், இதுவரை, 125 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்து, பாதுகாப்பான பணப் பரிவர்த்தனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.வலைதளங்கள் கொடுக்கும், ‘லிங்க்’ மூலம், ‘ஆப்’களை பதிவிறக்காமல், நேரடியாக, அசல் வலைதளத்தில் இருந்து பதிவிறக்குவது பாதுகாப்பானது என, வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|