பதிவு செய்த நாள்
19 பிப்2017
02:30
சென்னை : சென்னையைச் சேர்ந்த, சுந்தரம் பைனான்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:நிறுவனம், அதன், நிதி துறை சாரா முதலீட்டு வர்த்தகத்தை பிரித்து, சுந்தரம் பைனான்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் என்ற நிறுவனத்தின் கீழ், கொண்டு வர முடிவு செய்துள்ளது. இதற்கு, நிறுவனத்தின் இயக்குனர் குழு, ஒப்புதல் அளித்துள்ளது. இதையடுத்து, பங்கு முதலீட்டாளர்களின் அனுமதியுடன், சுந்தரம் பைனான்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள், பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும். இதற்காக, உரிய விதிமுறைகளை பூர்த்தி செய்து, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பிடம் அளித்து, அனுமதி பெறப்படும். சுந்தரம் பைனான்ஸ் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கு, அவர்கள் வைத்துள்ள பங்குகளுக்கு நிகராக, சுந்தரம் பைனான்ஸ் இன்வெஸ்ட்மென்ட்ஸ் நிறுவனத்தின் பங்குகள், இலவசமாக வழங்கப்படும்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|