பதிவு செய்த நாள்
25 பிப்2017
04:32
புதுடில்லி : ஓரியன்ட் எலக்ட்ரிக் நிறுவனம், 2,000 கோடி ரூபாய் விற்றுமுதல் ஈட்ட முடிவு செய்துள்ளது.
சி.கே.பிர்லா குழுமத்தைச் சேர்ந்த, ஓரியன்ட் எலக்ட்ரிக், மின் சாதனங்கள் உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம், வருவாயை அதிகரிக்க, புதிய மின் சாதனங்களை, அதிகளவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி ராகேஷ் கண்ணா கூறியதாவது:எங்கள் நிறுவனம், தற்போது, முதல்நிலை மின் விசிறிகளை, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது. மொத்த விற்பனையில், ஏற்றுமதியின் பங்கு, அடுத்த நான்கு ஆண்டு களில், 15 சதவீதம் வரை அதிகரிக்கும். மின் விசிறி, மின் விளக்கு உள்ளிட்ட பிரிவுகளில், புதிய சாதனங்கள் அதிகஅளவில் அறிமுகம் செய்யப்படும். கடந்த நிதியாண்டில், எங்கள் நிறுவனத்தின் விற்றுமுதல், 1,200 கோடி ரூபாயை எட்டியது. அடுத்த நான்கு ஆண்டுகளில், 2,000 கோடி ரூபாயை விற்றுமுதலாக ஈட்ட முடிவு செய்யப்பட்டு உள்ளது. மத்திய அரசின், ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தால், மின் சாதனங்களுக்கான தேவை அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|