பதிவு செய்த நாள்
02 மார்2017
00:00
மும்பை : பெப்சிகோ நிறுவனம், மஹாராஷ்டிராவில், ஐ.டி.ஐ., எனப்படும், தொழில்நுட்ப பயிற்சி மையங்களை மேம்படுத்தவும்; உணவு பதப்படுத்துதல் துறையில், சிறந்த வல்லுனர்களை உருவாக்கவும், அம்மாநில அரசுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கை:பெப்சிகோ தலைவர் இந்திரா நுாயி, மஹாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் முன்னிலையில், இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. உணவு பதப்படுத்துதல் துறையில், திறன் மேம்பாட்டு பயிற்சி மூலம், சிறந்த வல்லுனர்களை உருவாக்க, இந்த ஒப்பந்தம் உதவும். மேலும், மஹாராஷ்டிராவில், தொழில்நுட்ப பயிற்சி மையங்களை மேம்படுத்தவும் நடவடிக்கைகள் எடுக்கப்படும்.நிறுவனம், ஏற்கனவே, பழச்சாறு பானங்கள் தொழிலில், மாநில அரசுடன் கூட்டு வைத்து, 180 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.பெப்சிகோ நிறுவனம், திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு, எவ்வளவு முதலீடு செய்யப் போகிறது என்ற தகவலை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|