பதிவு செய்த நாள்
02 மார்2017
10:37
மும்பை : இந்திய பங்குச்சந்தைகள் கடந்த இருதினங்களாக நல்ல ஏற்றத்துடன் காணப்படுகின்றன. அக்டோபர் - டிசம்பர் மாதத்திற்கான நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்த அளவுக்கு இருப்பதாலும், இதன்காரணமாக முன்னணி நிறுவன பங்குகள் உயர்வுடன் இருப்பதாலும் நேற்று முதல் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் காணப்படுகின்றன. இந்த ஏற்றம் இன்றும் தொடர்கிறது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(காலை 9.15மணி) மும்பை பங்குச்சந்தையின் குறியீட்டு எண் சென்செக்ஸ் 148.46 புள்ளிகள் உயர்ந்து, 29 ஆயிரம் புள்ளிகளை கடந்து 29,132.95-ஆகவும், தேசிய பங்குச்சந்தையின் நிப்டி 43.70 புள்ளிகள் உயர்ந்து 8,989.50-ஆகவும் வர்த்தகமாகின. மேலும் ஆசிய பங்குச்சந்தைகளான ஹாங்காங், ஜப்பான் பங்குச்சந்தைகளும் உயர்வுடன் இருப்பதும் இந்திய பங்குச்சந்தைகள் உயர காரணமாகின.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|