பதிவு செய்த நாள்
15 மார்2017
00:19
ஐதராபாத் : இந்திய சிட் பண்டு நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை: இந்தியாவில், 30 ஆயிரத்திற்கும் அதிகமான, பதிவு செய்யப்பட்ட சிட் பண்டு நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்நிறுவனங்களின் ஓராண்டு விற்றுமுதல், 30 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக உள்ளது.
விரைவில் அறிமுகமாக உள்ள, ஜி.எஸ்.டி., எனப்படும், சரக்கு மற்றும் சேவை வரியில், சிட் பண்டு நிறுவனங்களுக்கான சேவை வரி விகிதங்கள், அதிகம் இருக்கும் என, தகவல்கள் வெளியாகி உள்ளன. வரி உயர்வு அமலானால், அது, சிட் பண்டு தொழிலை மிகவும் பாதிக்கும். எனவே, சரக்கு மற்றும் சேவை வரியில், சிட் பண்டு நிறுவனங்களுக்கு வரி விலக்கு அளிக்க வேண்டும் அல்லது குறைந்த வரி நிர்ணயிக்க வேண்டும்.
சிட் பண்டு நிறுவனங்களை, வங்கி சாரா நிதி நிறுவனங்கள் பிரிவில் சேர்க்க வேண்டும். இதற்காக, 1982ம் ஆண்டின், சிட் பண்டு சட்டத்தில் உடனடியாக திருத்தம் செய்ய வேண்டும். இந்த சட்டத்திருத்தம் குறித்த ஆலோசனை வழங்குவதற்காக, தனிக் குழுவை, ஐந்து ஆண்டுகளுக்கு முன், மத்திய அரசு நியமித்துள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|