பதிவு செய்த நாள்
21 மார்2017
00:59
புதுடில்லி : கார் உற்பத்தி மற்றும் விற்பனையில் முதலிடத்தில் உள்ள, மாருதி சுசூகி இந்தியா நிறுவனம், 2,000 விற்பனை மையங்களை அமைத்து சாதனை படைத்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக, வாடிக்கையாளர்களுக்கு, புதிய பிரிவுகளின் கீழ், புது மாடல் கார்களை, நவீன தொழில்நுட்பத்துடன் வழங்கி வருகிறோம். அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் நிறுவனத்தின் தயாரிப்புகள் சென்றடையும் நோக்கில், 1,643 நகரங்களில், 2,000 விற்பனை மையங்களை அமைத்து உள்ளோம்; இதை, வரும், 2020க்குள், 4,000 ஆக உயர்த்த திட்டமிட்டு உள்ளோம்.
நிறுவனத்தின் பிரீமியம் சில்லரை விற்பனை மையமான, ‘நெக்ஸா’வின் எண்ணிக்கை, 127லிருந்து, 250 ஆக அதிகரித்து உள்ளது. நிறுவனம், அடுத்த நிதியாண்டில், நான்கு புதிய தயாரிப்புகளை வெளியிட உள்ளது. இதில், இரண்டு புதிய கார்களும்; மற்றவை, ஏற்கனவே உள்ள தயாரிப்புகளை மேம்படுத்தி வழங்கவும் உள்ளோம்.வரும், 2020க்குள், 20 லட்சம் கார்களை விற்பனை செய்ய இலக்கு நிர்ணயித்து உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|