பதிவு செய்த நாள்
21 மார்2017
01:03
புதுடில்லி : ‘‘பங்குச் சந்தைகளை வரி ஏய்ப்புக்கு பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம்,’’ என, பி.எஸ்.இ., எனப்படும், மும்பை பங்குச் சந்தையின் தலைமை செயல் அதிகாரி ஆசிஷ் சவுகான் உறுதிபட தெரிவித்து உள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது: பங்குச் சந்தைகளில், அதிகளவில் வர்த்தகம் நடைபெறாத, சொற்ப மதிப்புள்ள பங்குகள் மூலம் வரி ஏய்ப்பு நடைபெறுவதாகவும், விலையை செயற்கையாக உயர்த்தி லாபம் பார்ப்பதாகவும் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளில், இது போன்ற வரி ஏய்ப்புகள், வெளிச்சத்திற்கு வந்துள்ளன. பங்கு விற்பனை வருவாய்க்கு, மூலதன ஆதாய வரியில் விலக்கு அளிக்கப்படுவது தான், வரி ஏய்ப்புக்கு வழிவகுக்கிறது.
மிகச் சொற்பமான பங்கு மதிப்பு கொண்டுள்ள, சிறிய நிறுவனங்களின் பங்குகள் மூலமாகத்தான், வரி ஏய்ப்பு செய்யப்படுவதாக கூறப்பட்டாலும், பெரிய நிறுவனங்களின் பங்குகளுக்கும், இத்தகைய வரி ஏய்ப்பில் பங்கு இருக்க வாய்ப்பு உள்ளது. ஏனெனில், மூலதன ஆதாய வரி விலக்கு சலுகையை பெறுவதில், பெரிய நிறுவனங்களின் பங்கு, 80 – 90 சதவீதமாக உள்ளது. ஆகவே, மத்திய அரசு பங்கு விற்பனை வருவாய்க்கு, மூலதன ஆதாய வரி விலக்கு சலுகை குறித்து, மறுஆய்வு செய்ய வேண்டும்.
இந்த சலுகையில் உள்ள ஓட்டைகளை ஆராய்ந்து, பங்கு வர்த்தகத்தில் நடைபெறும் வரி ஏய்ப்பை முழுவதுமாக தடுக்க உறுதியான சட்டம் இயற்ற வேண்டும். மத்திய பட்ஜெட்டில், பங்கு பரிவர்த்தனை வரி செலுத்தி வாங்கப்படும் பங்கு விற்பனை வாயிலான வருவாய்க்கு மட்டும், மூலதன ஆதாய வரி விலக்கு சலுகை வழங்கப்படும் என, தெரிவிக்கப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. பங்குச் சந்தைகளை வரி ஏய்ப்புக்கு பயன்படுத்த, பி.எஸ்.இ., அனுமதிக்காது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|