பதிவு செய்த நாள்
24 மார்2017
00:09
புதுடில்லி : மத்திய அரசு, பொதுத் துறையைச் சேர்ந்த, 13 வங்கிகளுக்கு நடப்பு, 2016 – 17ம் நிதியாண்டில், பங்கு மூலதனமாக, 25 ஆயிரம் கோடி ரூபாய் வழங்க, இலக்கு நிர்ணயித்துள்ளது. இதில், இதுவரை, 22,915 கோடி ரூபாய் வழங்கப்பட்டு உள்ளது.
இந்நிலையில், பங்கு மூலதனம் மேற்கொள்ள, தேர்வு செய்யப்பட்ட வங்கிகளுள் ஒன்றான, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு, மத்திய நிதியமைச்சகம், 1,100 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
இது குறித்து, ஐ.ஓ.பி., வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘நடப்பு நிதியாண்டில், வங்கியின் பங்கு மூலதனத்தை உயர்த்தும் நோக்கில், மத்திய நிதியமைச்சகம், 1,100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம், வங்கி, கடன் வசதிகளை மேம்படுத்தவும்; சந்தையில் கூடுதலாக நிதி திரட்டிக் கொள்ளவும் முடியும் என’ தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|