பதிவு செய்த நாள்
30 மார்2017
00:35
புதுடில்லி : சீனாவைச் சேர்ந்த ஜியோமி, இந்தியாவில், மொபைல் போன்கள் விற்பனையில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனத்தின் நிறுவனர் லீ ஜுன், ஒரு வார பயணமாக, இந்தியா வந்துள்ளார். அவர், பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார். அப்போது, இந்தியர்கள் விரும்பும் வகையில், உள்நாட்டில் ஸ்மார்ட் போன் வடிவமைப்பது, ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ், இந்தியாவில் போன் உற்பத்தி செய்வது ஆகியவை தொடர்பாக ஆலோசித்து உள்ளார்.
இது குறித்து, அந்நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கூறியதாவது: இந்தியா வந்துள்ள எங்கள் நிறுவனத்தின் தலைவர், பிரதமர் மோடி, மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, தகவல் தொழில்நுட்ப அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ஆகியோரை சந்தித்து, மொபைல் உற்பத்தியை அதிகரிப்பது குறித்து பேசினார். ஆந்திர மாநிலம், ஸ்ரீ சிட்டியில், ஜியோமி, தன் இரண்டாவது தொழிற்சாலை அமைப்பதற்கான அறிவிப்பை, சமீபத்தில் வெளியிட்டது.அடுத்த மூன்று ஆண்டுகளில், நிறுவனம், 20 ஆயிரம் வேலைவாய்ப்புகளை உருவாக்கும். 2016ல், ஜியோமி இந்தியாவின் வருவாய், 100 கோடி டாலரை எட்டியது. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|