பதிவு செய்த நாள்
04 ஏப்2017
05:05
மும்பை : எஸ்.பி.ஐ., வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சார்யா கூறியதாவது: ஸ்.பி.ஐ., உடன், ஐந்து துணை வங்கிகள் மற்றும் பாரதிய மகிளா வங்கி இணைக்கப்பட்டு உள்ளன. இதையடுத்து, வங்கியின் செலவுகளை குறைக்க, 1,800 கிளைகளை மாற்றும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்; புதிய கிளைகள் திறப்பது குறைக்கப்படும். எஸ்.பி.ஐ.,யை விட, துணை வங்கிகளுக்கு வாராக்கடன் விகிதம் அதிகம் உள்ளது. அதனால், இந்த இணைப்பால், எஸ்.பி.ஐ., மொத்த வாராக்கடன் மேலும் அதிகரிக்கும் என, எதிர்பார்க்க வேண்டாம். இணைப்பு தொடர்பாக, வங்கியின் சொத்து மதிப்பு குறித்த ஆய்வுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டதை அடுத்து, எஸ்.பி.ஐ., 8,600 கோடி ரூபாய் கூடுதலாக ஒதுக்கீடு செய்துள்ளது. அதனால், இணைந்த வங்கிகளுடன் சிறப்பாக செயல்பட்டு, செலவை குறைத்து, வாராக்கடன் அளவை கட்டுக்குள் கொண்டு வருவோம். வரும், மே, 27க்குள் அனைத்து துணை வங்கிகளின் தரவுகளும் ஒருங்கிணைக்கப்பட்டு விடும். இணைப்பு பணிகள் முழுவதும், ஜூன் மாதத்திற்குள் முடிவடைந்து விடும். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|