சர்ச்சைக்கு முடிவு காண ‘ஸ்நாப்சாட்’ நிறுவனம் முயற்சிசர்ச்சைக்கு முடிவு காண ‘ஸ்நாப்சாட்’ நிறுவனம் முயற்சி ... ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.55 ரூபாயின் மதிப்பு உயர்வு - ரூ.64.55 ...
ரொக்கம் – ஏ.டி.எம்., நிர்வகிப்பு நிறுவனங்களில் 100 சதவீத அன்னிய முதலீட்டுக்கு அனுமதி
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

19 ஏப்
2017
01:57

புதுடில்லி : வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்­பும் சேவை­யில் ஈடு­பட்­டுள்ள நிறு­வ­னங்­கள், ஏ.டி.எம்.,களை நிர்­வ­கிக்­கும் நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­றில், 100 சத­வீத அன்­னிய நேரடி முத­லீட்டை அனு­ம­திக்க, மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது.
இந்­தி­யா­வில், வங்­கி­கள் சார்­பாக, அவற்­றின், ஏ.டி.எம்., மையங்­களில் பணம் நிரப்­பும் சேவை­யில், 12க்கும் மேற்­பட்ட நிறு­வ­னங்­கள் ஈடு­பட்­டுள்ளன. இத்­த­கைய, ரொக்­கச் சேவை நிறு­வ­னங்­கள், ஏ.டி.எம்., மையங்­களை நிர்­வ­கிக்­கும் நிறு­வ­னங்­கள் ஆகி­யவை, தனி­யார் பாது­காப்பு முகமை அமைப்­பு­ கள் கட்­டுப்­பாட்டு சட்­டத்­தின் கீழ் வரு­வ­தா­கக் கூறி, அவற்­றில், 49 சத­வீத அள­விற்கே, அன்­னிய நேரடி முத­லீட்­டிற்கு, மத்­திய அரசு அனு­மதி அளித்­துள்­ளது. ஆனால், இந்த சட்­டம் தங்­க­ளுக்கு பொருந்­தாது என, ரொக்­கச் சேவை­யில் ஈடு­பட்­டுள்ள நிறு­வ­னங்­கள் கூறி வரு­கின்றன.
தனி­யார் நிறு­வ­னங்­களின் பாது­காப்­புக்­காக, பணி­யா­ளர்­களை நிய­மிக்­கும் நிறு­வ­னங்­கள், பாது­காப்பு வாக­னங்­களை ஒப்­பந்த அடிப்­ப­டை­யில் வழங்­கும் நிறு­வ­னங்­கள் ஆகி­ய­வற்­றைத் தான், இந்த சட்­டம் கட்­டுப்­ப­டுத்­தும் என, அவை தெரி­விக்­கின்றன. இத்­த­கைய குழப்­ப­மான சூழல் கார­ண­மாக, ரொக்­கச் சேவை துறை­யில், அன்­னிய நேரடி முத­லீட்டை உயர்த்­து­வ­தில் சிக்­கல் நீடித்து வந்­தது. இப்­பி­ரச்னை குறித்து, கடந்த மாதம், பிர­த­மர் அலு­வ­லக உய­ர­தி­கா­ரி­கள் கூட்­டத்­தில் விவா­திக்­கப்­பட்­டது.
இது குறித்து, உய­ர­தி­காரி ஒரு­வர் கூறி­ய­தா­வது: ரொக்­கச் சேவை மற்­றும் ஏ.டி.எம்.,களை நிர்­வ­கிக்­கும் நிறு­வ­னங்­க­ளுக்கு, தனி­யார் பாது­காப்பு முகமை அமைப்­பு­கள் கட்­டுப்­பாட்டு சட்­டம் பொருந்­தாது என, தெளி­வான அறிக்கை வெளி­யி­டு­மாறு, உள்­துறை அமைச்­ச­கத்தை கேட்­டுக் கொள்­வது என, கூட்­டத்­தில் முடிவு செய்­யப்­பட்­டது. அதன்­படி, உள்­துறை அமைச்­ச­கம், விரை­வில் அறிக்கை வெளி­யி­டும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது.
இதன் மூலம், ரொக்­கச் சேவை, ஏ.டி.எம்., நிர்­வா­கம் ஆகி­ய­வற்­றில் ஈடு­பட்­டுள்ள நிறு­வ­னங்­களில், 100 சத­வீத அன்­னிய நேரடி முத­லீடு மேற்­கொள்­வ­தற்­கான தடை நீங்­கும். அத்­து­டன், கரன்­சி­களை ஆய்வு செய்­வது, அடுக்­கு­வது, எண்­ணு­வது உள்­ளிட்ட பணி­க­ளுக்­கான சாத­னங்­களை தயா­ரிக்­கும் நிறு­வ­னங்­க­ளி­லும், 100 சத­வீத அன்­னிய நேரடி முத­லீடு மேற்­கொள்ள முடி­யும்.இவ்­வாறு அவர் கூறி­னார்.
40 ஆயி­ரம் கோடி ரூபாய்ரைட்­டர் சேப்­கார்டு, எஸ்.ஐ.எஸ்., செக்­யூ­ரி­டாஸ், சி.எம்.எஸ்., செக்­யூர் வேல்யூ, லாஜி­கேஷ், பிரிங்ஸ் ஆர்யா, செக்­யூ­ரிட்­டன்ஸ் அண்டு சயின்­டி­பிக் செக்­யூ­ரிட்டி மேனேஜ்­மென்ட் சர்­வீ­சஸ் உள்­ளிட்ட நிறு­வ­னங்­கள், வங்கி ஏ.டி.எம்.,களில் பணம் நிரப்­பும் சேவையை மேற்­கொண்டு வரு­கின்றன. இவை, தின­மும், 40 ஆயி­ரம் கோடி ரூபாய் அள­விற்கு, ஏ.டி.எம்.,களில் பணத்தை நிரப்­பு­கின்றன. கரன்­சியை ஆய்வு செய்­வது, ரூபாய் நோட்­டு­களை எண்­ணு­வது உள்­ளிட்ட பணி­க­ளுக்­கான சாத­னங்­களை, டி.வி.எஸ்., எலக்ட்­ரா­னிக்ஸ், ஐ.டி.ஐ., போன்ற நிறு­வ­னங்­கள் தயா­ரித்து வரு­கின்றன.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)