ஜி.எஸ்.டி.,யால் சிறிய கார் விலை உயரும்ஜி.எஸ்.டி.,யால் சிறிய கார் விலை உயரும் ... 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பும் எழுச்சி 21 மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பும் எழுச்சி ...
வேளாண் சந்தையில் தனியாருக்கு அனுமதி; விவசாயி வருவாய் 2 மடங்கு உயர வாய்ப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

26 ஏப்
2017
04:14

புது­டில்லி : உற்­பத்தி செய்­யும் வேளாண் பொருட்­க­ளுக்கு, விவ­சா­யி­கள், உரிய விலையை பெற வேண்­டும் என்ற நோக்­கத்­தில், மொத்த விற்­பனை வேளாண் சந்தையில், தனி­யாரை அனு­ம­திக்க, மத்­திய அரசு முடிவு செய்­துள்­ளது. இதற்­காக, வேளாண் உற்­பத்தி மற்­றும் கால்­நடை சந்­தைப்­ப­டுத்­து­தல் மாதிரி சட்­டம் உரு­வாக்­கப்­பட்டு உள்­ளது.
விவ­சா­யம், மாநில அர­சு­களின் அதி­கா­ரத்­தின் கீழ் வரு­வ­தால், இந்த சட்­டத்தை நடை­மு­றைப்­ப­டுத்­து­வது, அந்­தந்த மாநில அர­சு­களின் பொறுப்­பா­கும். குறைந்­த­பட்­சம், பா.ஜ., ஆளும், 15 மாநி­லங்­களில், மாதிரி சட்­டம் அம­லா­னால், அது, வேளாண் துறை­யில் மிகப்­பெ­ரிய சீர்­தி­ருத்­தத்தை ஏற்­ப­டுத்தி, விவ­சா­யி­கள் வரு­வாய், இரு மடங்கு உயர துணை புரி­யும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கிறது. தற்­போது, அர­சின், வேளாண் உற்­பத்தி சந்­தைப்­ப­டுத்­து­தல் குழு­வின், கீழ் உள்ள சந்­தை­களில், விவ­சா­யி­கள் தங்­கள் விளை­பொ­ருட்­களை, குறிப்­பிட்ட கட்­ட­ணம் செலுத்தி, நேர­டி­யாக விற்­பனை செய்­யும் வசதி உள்­ளது. நாட்­டில் இது போன்று, 6,746 சந்­தை­கள் மட்­டுமே உள்ளன; அவை ஒவ்­வொன்­றும், குறைந்­த­பட்­சம், 462 கி.மீ., துாரத்­தில் உள்ளன. இந்த நிலையை, புதிய மாதிரி சட்­டம் மாற்­றும்.
நாடு முழு­வ­தும் பர­வ­லாக, மொத்த விற்­பனை வேளாண் சந்­தை­கள் உரு­வாக வழி­வ­குக்­கும். இச்­சந்­தை­களில், விவ­சா­யி­கள், தங்­கள் விளை­பொ­ருட்­கள், கால்­ந­டை­கள் ஆகி­ய­வற்றை நேர­டி­யாக விற்­பனை செய்­ய­லாம். புதிய மாதிரி சட்­டத்­தின் கீழ், வேளாண் பொருட்­கள் விற்­ப­னையை ஒழுங்­குப்­ப­டுத்த, தனி ஆணை­யம் அமைக்­கப்­படும்.
மாநி­லங்­களின் விருப்­பம்புதிய மாதிரி சட்­டத்தை முழு­மை­யா­கவோ அல்­லது பகு­தி­யா­கவோ, தங்­கள் தேவைக்­கேற்ப, மாநி­லங்­கள் அமல்­ப­டுத்­த­லாம். சட்­டத்தை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான ஆலோ­ச­னை­களும் ஏற்­றுக் கொள்­ளப்­படும்.-ரமேஷ் சந்த், ‘நிடி ஆயோக்’ உறுப்­பி­னர்
நோக்­கம் நிறை­வே­றும்பெரும்­பான்­மை­யான மாநி­லங்­கள், புதிய மாதிரி சட்­டத்தை ஏற்­றுக் கொண்­டுள்ளன. இது, அம­லுக்கு வந்­தால், 2022ல், விவ­சா­யி­கள் வரு­வாயை, இரு மடங்கு உயர்த்த வேண்­டும் என்ற மத்­திய அர­சின் நோக்­கம் நிறை­வே­றும்-ராதா மோகன் சிங், மத்­திய வேளாண் துறை அமைச்­சர்
ஒரே சந்தை‘ஒரே வேளாண் சந்தை’ என்ற நோக்­கத்­தில், மாதிரி சட்­டம் உரு­வாக்­கப்­பட்டு உள்­ளது. இது, மாநில வேளாண் சந்­தை­களில், தாரா­ள­ம­ய­மாக்­க­லுக்கு வழி­வ­குக்­கும். ஒரே உரி­மத்­தில், வேளாண் பொருட்­க­ளு­டன், கால்­ந­டை­க­ளை­யும் விற்­பனை செய்­ய­லாம். நாடு முழு­வ­தும், 80 கி.மீ., இடை­வெ­ளி­யில், ஒரு மொத்த விற்­பனை வேளாண் சந்தை அமைய வேண்­டும் என்­பது, அர­சின் இலக்கு. தனி­யார் பங்­க­ளிப்­பால், வேளாண் சந்­தை­களில் ஆரோக்­கி­ய­மான போட்டி உரு­வா­கும். இத­னால், விவ­சா­யி­கள், தங்­கள் வேளாண் பொருட்­க­ளுக்கு, அதி­க­பட்ச விலையை பெற முடி­யும்.-அசோக் தல்­வாய், கூடு­தல் செய­லர், வேளாண் அமைச்­ச­கம்

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)