பதிவு செய்த நாள்
28 ஏப்2017
01:19
புதுடில்லி : பொதுத் துறையைச் சேர்ந்த, நலிவடைந்த ஐந்து நிறுவனங்களுக்குச் சொந்தமான நிலம் மற்றும் தொழிற்சாலைகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இதற்கான அறிவிப்பை, சொத்து விற்பனையை நிர்வகிக்கும், பொதுத் துறையைச் சேர்ந்த, என்.பி.சி.சி., நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
இது குறித்து, இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் அனுப் குமார் மிட்டல் கூறியதாவது: நலிவுற்ற, எச்.எம்.டி., பேரிங், இந்துஸ்தான் கேபிள்ஸ், இன்ஸ்ட்ருமென்டேஷன், எச்.எம்.டி., வாட்சஸ், துங்கபத்ரா ஸ்டீல் புராடெக்ட்ஸ் ஆகிய நிறுவனங்களின் நிலம், அசையா சொத்துகள் உள்ளிட்டவை, விற்பனை செய்யப்பட உள்ளன. இதில், மத்திய, மாநில அரசு துறைகள், பொதுத் துறை நிறுவனங்கள், அரசு அமைப்புகள் ஆகியவை மட்டுமே பங்கேற்கலாம். ஒரு மாதத்திற்குள், விண்ணப்பங்களை அளிக்க வேண்டும். சந்தை நிலவரம் அல்லது கையகப்படுத்தும் சொத்துகளின் மதிப்பு அடிப்படையில், விற்பனை விலை நிர்ணயிக்கப்படும்.
டில்லி, குஜராத், கர்நாடகா, மஹாராஷ்டிரா, ராஜஸ்தான், உத்தரகண்ட், தெலுங்கானா, உ.பி., மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில், இந்த சொத்துகள் உள்ளன. உத்தரகண்டில், எச்.எம்.டி., வாட்சஸ் நிறுவனத்தின், 92.3 ஏக்கர் பரப்பிலான, இரு சொத்துகள் விற்கப்பட உள்ளன. ஐதராபாத்தில் உள்ள, எச்.எம்.டி., பேரிங் நிறுவனத்தின், 29.33 ஏக்கர் நிலம், கர்நாடக மாநிலம், பெல்லாரியில் உள்ள, துங்கபத்ரா ஸ்டீல் புராடெக்ட்ஸ் நிறுவனத்தின், 80 ஏக்கர் பரப்பிலான அசையா சொத்து ஆகியவை விற்பனை செய்யப்படும்.அது போல, இன்ஸ்ட்ருமென்டேஷன் நிறுவனத்தின், நிலம் உள்ளிட்ட ஒன்பது சொத்துகள், இந்துஸ்தான் கேபிள்ஸ் நிறுவனத்தின், எட்டு அசையா சொத்துகள் விற்பனை செய்யப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|