ரியல் எஸ்டேட் துறையில் ரூ.45,000 கோடி முதலீடு குவியும்ரியல் எஸ்டேட் துறையில் ரூ.45,000 கோடி முதலீடு குவியும் ... அட்ஷயதிரியை நாளில் சவரனுக்கு ரூ.104 உயர்ந்த தங்கம் அட்ஷயதிரியை நாளில் சவரனுக்கு ரூ.104 உயர்ந்த தங்கம் ...
சர்வதேச வைர மையமாக இந்தியா உருவெடுக்கிறது
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2017
23:57

மும்பை : கடந்த, 2016 – 17ம் நிதி­யாண்­டில், இந்­தி­யா­வின் நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் தங்க ஆப­ர­ணங்­கள் ஏற்­று­மதி, 12.32 சத­வீ­தம் அதி­க­ரித்து, 2.89 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இது, முந்­தைய, 2015 – 16ம் நிதி­யாண்­டில், 2.57 லட்­சம் கோடி ரூபா­யாக இருந்­தது.
இது குறித்து, நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் தங்க ஆப­ர­ணங்­கள் ஏற்­று­மதி மேம்­பாட்டு அமைப்­பின் தலை­வர் பிர­வீன் சங்­கர் பாண்­டியா கூறி­ய­தா­வது: கடந்த நிதி­யாண்­டில், அமெ­ரிக்கா, ஹாங்­காங், மத்­திய கிழக்கு பிராந்­தி­யம் உள்­ளிட்ட, முக்­கிய ஏற்­று­மதி நாடு­களின் பொரு­ளா­தா­ரம் வளர்ச்சி கண்­டுள்­ளது. இத­னால், அந்­நா­டு­க­ளுக்­கான, நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் தங்க ஆப­ர­ணங்­கள் ஏற்­று­மதி அதி­க­ரித்­து உள்­ளது. இத்­து­றை­யின் ஏற்­று­மதி, நடப்பு, 2017 – 18ம் நிதி­யாண்­டில், 10 சத­வீ­தம் அதி­க­ரிக்­கும் என, மதிப்­பி­டப்­பட்டு உள்­ளது.
கடந்த நிதி­யாண்­டில், நறுக்­கப்­பட்ட மற்­றும் பட்டை தீட்­டப்­பட்ட வைரங்­கள் ஏற்­று­மதி, 12.6 சத­வீ­தம் உயர்ந்து, 1.52 லட்­சம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது. இது, முந்­தைய நிதி­ஆண்­டில், 1.35 லட்­சம் கோடி ரூபா­யாக இருந்­தது. இதே காலத்­தில், தங்க நகை­கள் ஏற்­று­மதி, 4.14 சத­வீ­தம் வளர்ச்சி கண்டு, 56,138 கோடி ரூபா­யில் இருந்து, 58,464 கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. அர்­மீ­னியா, கஜ­கஸ்­தான் போன்ற காமன்­வெல்த் சுயேச்சை நாடு­க­ளி­லும், நவ­ரத்­தி­னங்­கள், தங்க ஆப­ர­ணங்­கள் ஆகி­ய­வற்­றுக்­கான தேவை அதி­க­ரித்­து உள்­ளது.இறக்­கு­மதிகடந்த நிதி­யாண்­டில், நவ­ரத்­தி­னங்­கள், தங்க ஆப­ர­ணங்­கள் இறக்­கு­மதி, முந்­தைய நிதி­யாண்டை விட, 21.53 சத­வீ­தம் உயர்ந்து, 1.58 லட்­சம் கோடி ரூபா­யில் இருந்து, 1.92 லட்­சம் கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.
அதே சம­யம், இதே காலத்­தில், நறுக்­கப்­பட்ட மற்­றும் பட்டை தீட்­டப்­பட்ட வைரங்­கள் இறக்­கு­மதி, 2.80 சத­வீ­தம் சரி­வ­டைந்து, 18,128 கோடி ரூபா­யில் இருந்து, 17,620 கோடி ரூபா­யாக குறைந்­துள்­ளது. இதே காலத்­தில், கச்சா வைரங்­கள் இறக்­கு­மதி, 24.47 சத­வீ­தம் அதி­க­ரித்து, 91,970 கோடி ரூபா­யில் இருந்து, 1.14 லட்­சம் கோடி ரூபா­யாக உயர்ந்­துள்­ளது. இது, உல­கின் வைர மைய­மாக, இந்­தி­யாவை உரு­வாக்க வேண்­டும் என்ற நோக்­கத்­திற்கு, வலு சேர்ப்­ப­தாக உள்­ளது. இதே வளர்ச்சி தொடர்ந்­தால், 2022ல், நவ­ரத்­தி­னங்­கள் மற்­றும் தங்க ஆப­ர­ணங்­கள் வர்த்­த­கத்­தில், இந்­தியா முத­லி­டத்தை பிடிக்­கும். இவ்­வாறு அவர் கூறி­னார்.
வெள்­ளி­யும் வளர்ச்சி:
அமெ­ரிக்கா, ஹாங்­காங், ஐக்­கிய அரபு நாடு­கள் ஆகி­ய­வற்­றில், வெள்ளி ஆப­ர­ணங்­க­ளுக்­கான தேவை பெருகி வரு­கிறது. அத­னால், அந்­நா­டு­களில் ஏற்­று­ம­தி­யா­ளர்­கள் கவ­னம் செலுத்­தத் துவங்கி உள்­ள­னர். கடந்த நிதி­யாண்­டில், வெள்ளி ஆப­ர­ணங்­கள் ஏற்­று­மதி, 38.64 சத­வீ­தம் உயர்ந்து, 19,417 கோடி ரூபா­யில் இருந்து, 26,921 கோடி ரூபா­யாக அதி­க­ரித்­துள்­ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)