பதிவு செய்த நாள்
05 மே2017
09:57
மும்பை : ஆசிய பங்குச்சந்தைகளில் ஏற்பட்டுள்ள சரிவின் எதிரொலியாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் வர்த்தகத்தை துவக்கி உள்ளன.
வாராக்கடன்களை வசூலிப்பதற்கு ரிசர்வ் வங்கிக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வழிவகை செய்யும் அவசர சட்டத்திற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் வங்கி ஒழுங்குமுறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. இதனால் வங்கித்துறை பங்குகள் இன்றும் ஏற்றத்துடனேயே காரணப்படுகின்றன. இருப்பினும் ஆசிய சந்தைகளின் சரிவின் காரணமாக இந்திய பங்குச்சந்தைகள் சரிவுடன் துவங்கி உள்ளன.
வாரத்தின் இறுதி வர்த்தக நாளான இன்று (மே 05, காலை 9 மணி நிலவரம்) வர்த்தக நேர துவக்கத்தின் போது சென்செக்ஸ் 97.81 புள்ளிகள் சரிந்து 30,028.40 புள்ளிகளாகவும், நிப்டி 27.55 புள்ளிகள் சரிந்து 9332.35 புள்ளிகளாகவும் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|