பதிவு செய்த நாள்
06 மே2017
04:22
யக்கோமா:மத்திய பொருளாதார விவகாரங்கள் துறை
செயலர் சக்திகாந்த தாஸ் கூறியதாவது:வரும், 2018 – 19ம் நிதியாண்டில், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி, 8 சதவீதமாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. பொருளாதார சீர்திருத்தங்களுக்காக, செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பு உள்ளிட்ட, பல நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுத்து வருகிறது. 2016 – 17ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.1 சதவீதமாக இருந்தது.
நாட்டில், சரக்கு மற்றும் சேவை வரி, ஜூலை, 1 முதல் அமலுக்கு வருகிறது. இதன் மூலம், நாடு முழுவதும், ஒரே சந்தை மற்றும் வரி விதிப்பு முறை உருவாகும். புதிய வரி விதிப்பு மூலம், மக்கள், தொழில் முதலீட்டாளர்கள் என, அனைவரும் பயன் அடைவர். சரக்கு மற்றும் சேவை வரி அமலுக்கு வருவதை அடுத்து, வரும், 2018 – 19ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமெடுத்து, 8 சதவீதத்தை எட்டும் என, மதிப்பிடப்பட்டு உள்ளது.
நடப்பு நிதியாண்டு பட்ஜெட்டில், நடப்பு கணக்கு பற்றாக்குறை இலக்கு, 3.2 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. திட்டமிட்டபடி, இந்த இலக்கு எட்டப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|