பதிவு செய்த நாள்
11 மே2017
16:01
புதுடில்லி : ஏர்டெல் நிறுவனம் 4ஜி இணைய சேவையை மேம்படுத்த நடப்பு நிதியாண்டில், ரூ.1.5 லட்சம் கோடியை முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஜியோ வருகையால், இந்தியாவின் மிகப்பெரிய மொபைல்போன் சேவை நிறுவனமான ஏர்டெல்லின் நிகர லாபம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் 72 சதவீதம் குறைந்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலக்கட்டத்தில் ரூ.1319 கோடி நிகர லாபம் ஈட்டிய ஏர்டெல் நிறுவனம், தற்போது ரூ.373 கோடி மட்டுமே ஈட்டியுள்ளது. ஜியோ வருகையால் வீழ்ச்சியடைந்த வருவாயை அதிகரிக்க முடிவு செய்துள்ள ஏர்டெல் நிறுவனம், 4ஜி இணைய சேவை திறனை மேம்படுத்தி, வாடிக்கையாளர்களை தக்கவைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
இதற்காக நடப்பு நிதியாண்டில் ரூ.1.5 லட்சம் கோடியை முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. முதற்கட்டமாக ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்களை தங்களுடன் இணைப்பதன் மூலம், வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 50 சதவீதம் உயரும் என்று கூறியுள்ள ஏர்டெல் நிறுவன அதிகாரிகள், ஜியோவுக்கு தொடர்ந்து சவால் விடுக்கும் திட்டங்களை செயல்படுத்த உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|