தங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வுதங்கம் விலை சவரனுக்கு ரூ.8 உயர்வு ... மாலை நேர நிலவரம் : தங்கம் விலையில் சிறிது உயர்வு மாலை நேர நிலவரம் : தங்கம் விலையில் சிறிது உயர்வு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
பணம் எடுத்தால் கட்டணமா? : எஸ்பிஐ மறுப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2017
13:35

மும்பை : எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை ஏடிஎம்.,ல் பணம் எடுக்கும் போதும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்திகளை எஸ்பிஐ நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது குறித்து எஸ்பிஐ அளித்துள்ள விளக்கத்தில், ஏடிஎம்.,ல் பணம் எடுத்தால் ரூ.25 சேவை கட்டணம் என்ற விதிமுறை வழக்கமான வங்கி கணக்கு வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது. மொபைல் வாலெட்டை பயன்படுத்தி ஏடிஎம்.,ல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும்.
இதே போன்று மொபைல் வாலெட் மூலம் தொழில்துறை பணம் பறிமாற்றம் செய்பவர்களிடமும் இந்த சேவை கட்டணம் வசூலிக்கப்படும். தொழில்துறை சார்ந்தவர்கள் மொபைல் வாலெட் மூலம் ரூ.1000 வரை பணம் டெபாசிட் செய்தால் 0.25 சதவீதமும், ரூ.2000 வரை பணம் எடுத்தால் 2.50 சதவீதமும் சேவை கட்டணம் வசூலிக்கப்படும். இந்த சேவை கட்டணம் இந்த ஆண்டு ஜூன் முதல் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட உள்ளது.
அனைத்து வாடிக்கையாளர்களும் ஏடிஎம்.,ல் பணம் எடுத்தால் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என முன்னர் வெளியிடப்பட்ட தகவல் சுற்றறிக்கையில் ஏற்பட்ட சில தவறுகளால் நிகழ்ந்தது. சரி செய்யப்பட்ட தெளிவான சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)