பதிவு செய்த நாள்
12 மே2017
13:35
மும்பை : எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் ஒவ்வொரு முறை ஏடிஎம்.,ல் பணம் எடுக்கும் போதும் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என வெளியான செய்திகளை எஸ்பிஐ நிர்வாகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இது குறித்து எஸ்பிஐ அளித்துள்ள விளக்கத்தில், ஏடிஎம்.,ல் பணம் எடுத்தால் ரூ.25 சேவை கட்டணம் என்ற விதிமுறை வழக்கமான வங்கி கணக்கு வாடிக்கையாளர்களுக்கு பொருந்தாது. மொபைல் வாலெட்டை பயன்படுத்தி ஏடிஎம்.,ல் பணம் எடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே ஒவ்வொரு முறை பணம் எடுக்கும் போதும் ரூ.25 கட்டணம் வசூலிக்கப்படும்.
இதே போன்று மொபைல் வாலெட் மூலம் தொழில்துறை பணம் பறிமாற்றம் செய்பவர்களிடமும் இந்த சேவை கட்டணம் வசூலிக்கப்படும். தொழில்துறை சார்ந்தவர்கள் மொபைல் வாலெட் மூலம் ரூ.1000 வரை பணம் டெபாசிட் செய்தால் 0.25 சதவீதமும், ரூ.2000 வரை பணம் எடுத்தால் 2.50 சதவீதமும் சேவை கட்டணம் வசூலிக்கப்படும். இந்த சேவை கட்டணம் இந்த ஆண்டு ஜூன் முதல் தேதியிலிருந்து அமல்படுத்தப்பட உள்ளது.
அனைத்து வாடிக்கையாளர்களும் ஏடிஎம்.,ல் பணம் எடுத்தால் ரூ.25 சேவை கட்டணம் வசூலிக்கப்படும் என முன்னர் வெளியிடப்பட்ட தகவல் சுற்றறிக்கையில் ஏற்பட்ட சில தவறுகளால் நிகழ்ந்தது. சரி செய்யப்பட்ட தெளிவான சுற்றறிக்கை விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|